
பெண்களுக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பல அரசியல் சட்டங்கள், சமூக தொண்டு நிறுவனங்கள் என பல இருந்தாலும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகள் இன்று வரை குறைந்த வழி இல்லை .
அதுவும் தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 3 பெண் குழந்தைகள் சில மிருகங்களால் கசக்கி தூக்கி எறியப்பட்டனர்.
இந்நிலையில் தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வரும் ராகுல் பிரீத்சிங் , நடிகை பாவனாவுக்கு நடந்தது போல் தனக்கு நேர்ந்திருந்தால், தன்னிடம் யாராவது தவறாக நடந்திருந்தால் அவர்களை கொலை செய்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
அதோடு நான் வெளியே கிளம்பினால் பார்த்துப் போ என்று அம்மா சொல்வார்கள். காரில் டிரைவர் இருக்கிறார் பிறகு என்ன என்று நினைப்பேன். பாவனா சம்பவத்திற்கு பிறகு யாரை நம்புவது, நம்பக் கூடாது என்று தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.