ராதிகா கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது - கார்த்தி திட்ட வட்டம்....!!!

First Published Nov 29, 2016, 6:08 PM IST
Highlights


நடிகர் சங்க பொதுக்கூட்டத்தில் முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், மற்றும் ராதாரவியை நிரந்தரமாக நீக்கிவிட்டதாக அறிவிக்க பட்டது. 

இதற்கு சரத்குமார் இந்த பிரச்னையை  நான் நீதிமன்றம் மூலமாக சட்ட ரீதியாக பார்த்துக்கொள்வதாக கூறினார்.

இதை தொடர்ந்து  ராதிகா நேற்று தனது  டுவிட்டரில் கேள்வி மேல் கேள்வி எழுப்பி நடிகர்  கார்த்தியை வெளுத்து வாங்கினர். ஆனால்  இவை எதற்குமே கார்த்தி பதில் கொடுக்கவில்லை.

தற்போது  பத்திரிக்கையாளர் சந்திப்பபிற்கு வந்த கார்த்தியிடம் இது பற்றி கேள்வி எழுப்பியபோது, இதற்கு பதில் கொடுத்துள்ள கார்த்தி  கடிதம் மூலம் கேள்வி கேட்டால்  பதில் சொல்லலாம், ஆனால் அவர்கள் சமூக வலைத்தளத்தில் கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது என திட்ட வட்டமாக கூறியுள்ளார்.

click me!