அம்பலமாகும் விஷாலின் எட்டு கோடி கையாடல்...நடக்குமா ‘இளையராஜா 75’ நிகழ்ச்சி?...

Published : Jan 24, 2019, 03:43 PM IST
அம்பலமாகும் விஷாலின் எட்டு கோடி கையாடல்...நடக்குமா ‘இளையராஜா 75’ நிகழ்ச்சி?...

சுருக்கம்

ரூபாய் எட்டு கோடிக்கும் மேல் தான் செய்த ஊழல்களை மறைக்கவே ‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சியை நடத்துவதில் பிடிவாதம் காட்டுகிறார் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் என்ற குற்றச்சாட்டுகளோடு கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

ரூபாய் எட்டு கோடிக்கும் மேல் தான் செய்த ஊழல்களை மறைக்கவே ‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சியை நடத்துவதில் பிடிவாதம் காட்டுகிறார் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் என்ற குற்றச்சாட்டுகளோடு கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் ஆகியோர் தலைமையில் இன்று புகார் அளிக்கப்பட்டது.

தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி, விஷால் தான் ஊழல் செய்யவில்லை என்பதை விஷால் நிரூபிக்கவேண்டும் என்று பல மாதங்களாகவே அவரது எதிரணியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு இன்று ஒரு பதில் அறிக்கை வெளியிட்ட விஷால், இளையராஜா 75’ நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு மார்ச் 3ம் தேதியன்று பொதுக்குழுவைக் கூட்டி கணக்கை ஒப்படைப்பதாகவும், அதே தேதியில் தேர்தலும் அறிவிப்பையும் வெளியிட்டு, அந்தத் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

விஷாலின் இந்த அறிக்கையில் உள்ள உள்குத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்ட எதிரணியினர், அவர் இளையராஜா நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டி, எடுத்த பணத்தை மறுபடியும் உள்ளே போட்டு அனைவரையும் குழப்பப்பார்க்கிறார் என்றும், இதுவரை ராஜாவுக்கு சம்பளம் கொடுப்பதற்காக 3.5 கோடி, நிகழ்ச்சிக்கு செட் போடுவதற்காக 2.5 கோடி என்று அவர் எழுதியுள்ள அத்தனை கணக்குகளுமே பொய்யானது என்றும்,  பண மோசடி செய்த வழக்கில் அவரைக் கைதுசெய்யவேண்டும் என்றும் போர்க்குரல் எழுப்பி வருகின்றனர்.

இதே எதிரணியின் இன்னொரு பிரிவினர், விஷால் இளையராஜா நிகழ்ச்சியை நடத்திவிட்டால், அதில் வரும் பணத்தைக்கொண்டு இதுவரை செய்த ஊழல்களை மறைத்துவிட வாய்ப்புள்ளதால், அந்நிகழ்ச்சியை தடைசெய்தே ஆகவேண்டும் என்று கோர்ட்டில் முறையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவ்வழக்கு மீதான விசாரணை வரும் திங்களன்று நடைபெறவிருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!