ஒரு கால் இல்லாமல் பிரபு தேவா ...வென்றதா பொய்க்கால் குதிரை ? விமர்சனம் இதோ!

By Kanmani PFirst Published Aug 5, 2022, 11:51 AM IST
Highlights

 பொய்க்கால் குதிரை படத்தின் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் குறைந்துவிட்டதாகவும், வில்லன் யார் என்பதை மறைக்க பல ட்விஸ்டுகளை வைத்தாலும், எளிதில் கண்டுபிடித்து விடும் ஸ்கிரிப்ட்டை தான் இயக்குனர் இயற்றியுள்ளார் என்கின்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

பிரபல நடன இயக்குனர் பிரபு தேவா தற்போது நடித்து முடித்துள்ள பொய்க்கால் குதிரை படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து, கஜினிகாந்த் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது பொய்க்கால் குதிரையை இயக்கியுள்ளார் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவரின் முந்தைய படங்கள் அடல்ட் படமாக அமைந்து சர்ச்சைக்குரிய இயக்குனராக இவர் பார்க்கப்பட்டார்.

இதை அடுத்து இவர் இயக்கிய கஜினிகாந்த் நகைச்சுவைகளமாக அமைந்து ரசிகர்களை ஈர்த்தது.  தற்போது இவர் பொய்க்கால் குதிரையை இயக்கியுள்ளார். விபத்தில் தனது மனைவி மற்றும் ஒரு காலை இழந்துவிட்ட  கதிரவன் ரோலில் பிரபுதேவா நடித்துள்ளார். பின்னர் தனது ஒற்றை மகளுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் செலவிடுகிறார் நாயகன். இவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையில் ஒரு திருப்பமாக தனது மகளுக்கு இருதய நோய் இருப்பது தெரிய வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது..எப்ப ரிலீஸ் தெரியுமா?

தன் பிள்ளையின் உடல் நிலையை சரி செய்வதற்காக நாயகன் ருத்ராவின் மகளை கடத்துகிறார். ருத்ரா ரோலில் வரலட்சுமி சரத்குமார் மிரட்டி உள்ளார். ஆனால கதிரவனின் பிளானை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வரலட்சுமி குழந்தை கடத்தப்படுவதை தடுப்பதற்கு பல முயற்சிகளை எடுக்கிறார். பின்னர் தன் குழந்தையை பிரபு தேவாவிடம் இருந்து வரலட்சுமி காப்பாற்றினாரா? பிரபுதேவா தன் மகளுக்கு ஆப்ரேஷன் செய்து காப்பாற்றிக்கொண்டாரா?  என்பதே இந்த படத்தின் மீதி கதையாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...சைக்கிள் சவாலுக்கு ரெடியான ஆர்யா... ஜெர்சியை வெளியிட்ட சூர்யா

பிரபுதேவாவின் படங்களில் அவரது ஆட்டம் பிரமிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்த படத்தில் இவர் ஒரு கால் இல்லாமல் நடித்துள்ளார். இருந்தும் ஓபனிங் பாடல் மற்றும் பேருந்தில் சண்டை உள்ளிட்ட இடங்களில் தனது பாணியில் அசத்தியுள்ளார் நாயகன். இந்த படத்தில் வரலட்சுமி ரோல் சர்க்கார் பட பாப்பாவை ஞாபகப்படுத்துவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். படத்தில் சார்பட்டா பரம்பரை வேம்புலி ஜான் கொக்கன்  குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் கணவர் தேவா வருகிறார். தேவாவின் கதாபாத்திரம் படத்தின் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பிரகாஷ் ராஜ், ரைசா வில்சன், ஜெகன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...காருக்குள் கவர்ச்சி...மாமனிதன் நாயகியின் கண்கவரும் போஸ்கள்!

கால்களை புயல் என சுழற்றும் மாஸ்டர் எப்படி ஒருகால் இல்லாத நபராக இந்த படத்தில் நடித்துள்ளார் என்பதை காணவே ரசிகர்கள் திரையரங்கிற்கு அதிக அளவில் வருவார்கள் என கூறப்படுகிறது. அதோடு படத்தின் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் குறைந்துவிட்டதாகவும் வில்லன் யார் என்பதை மறைக்க பல டிவிஸ்டுகளை வைத்தாலும், எளிதில்  கண்டுபிடித்து விடும் ஸ்கிரிப்ட்டை  தான் இயக்குனர் இயற்றியுள்ளார் என்கின்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

click me!