பாகுபலி 2 வெற்றிக்கு பின் திமிராக நடந்துகொள்ளும் பிரபாஸ்...

 
Published : May 19, 2017, 03:01 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
பாகுபலி 2 வெற்றிக்கு பின் திமிராக நடந்துகொள்ளும் பிரபாஸ்...

சுருக்கம்

prabas issue

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு, உலக அளவில் மிகவும் பிரபலமான நடிகராகிவிட்டார். பாகுபலிக்காக ஐந்து வருடம் தன்னை வருத்திக்கொண்டவர் தற்போது, அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் பாகுபலி 2 திரைப்படம் வெளிவந்த அனைத்து மொழிகளிலும், தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபம் ஈட்டி கொடுத்துள்ளதால் தங்களுடைய சந்தோஷத்தை சக்ஸஸ் மீட் நடத்தி கொண்டாடி வருகின்றனர்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, பிரபாஸை பலர் அழைத்தும் அவர் வர மறுப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே லண்டனில் நடைபெற்ற சிறப்பு காட்சிக்காக அவருக்கு அழைப்பு விடுத்தும் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அனுஷ்கா, தயாரிப்பாளர், இயக்குனர் ராஜமௌலி , தமன்னா போன்றோர் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது பாகுபலி 2 படத்தின், இந்தி உரிமையை பெற்ற இயக்குனர் கரண் ஜோஹர் சக்ஸஸ் மீட் நடத்த ஏற்பாடு செய்து, இந்த விழாவிற்கு அனைத்து கலைஞர்களுக்கும்  அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாது, என பிரபாஸ் சில காரணங்கள் கூறியும் தனக்காக விழாவை தள்ளி வைக்க வேண்டாம் நீங்கள் நடத்துங்கள் என கூறியுள்ளார்.

இதனால் பலர் பிரபாஸ் பாகுபலி வெற்றி, பிரபாஸை திமிராக நடந்து கொள்ள வைக்கிறது என கூறி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!