
இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி சி ஸ்ரீராம். தற்போது இருக்கும் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் பலருக்கு இவர் தான் குரு.
ஒளிப்பதிவாளர் ஆகா வேண்டும் என துடிக்கும் பல இளஞர்களுக்கு இவர் தான் ரோல் மாடல் கூட.
ஒளிப்பதிவு என்பது இது தான் என்ற எல்லையை உடைத்தெறிந்தவர் மனிதர். மௌன ராகத்தில் தொடங்கி, தற்போது வந்த ரெமோ வரை இவரது ஒளிப்பதிவு பேசப்படும் ஒன்றாகவே இருக்கிறது. இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் தமிழ் சினிமாவில் உள்ளது .
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் "நீங்கள் தான் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒளிப்பதிவாளரமே என்ற கேள்வி எழுப்ப பட்டதற்கு "ஆமாம் அதனால் என்ன, முதலில் அதிகமாக சம்பளம் வாங்கும் ஹீரோக்களை நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்தறேன், என்று காரா சாரமாக கூறுயுள்ளார்.
மேலும் இங்கே பல ஒளிப்பதிவாளர்கள் தங்கள் திறமைக்கு ஈடு இல்லாமல் குறைந்த சம்பளத்தை கொடுத்து ஏமாற்றி விடுகிறார்கள் என்றும்.
இன்னொரு விஷயம் எல்லா படத்துக்கும் என் சம்பளம் ஒரே மாதிரி இருக்காது. எப்போதுமே சின்ன படம் என்றால் அதற்கு ஏற்றார் போல் தான் நான் சம்பளம் வாங்குவேன் என்றார்.
இந்த விஷயம் இயக்குநரும், தயாரிப்பாளரும் என்னிடம் பேசினாலே போதும், நான் எப்போதுமே வெளிப்படையானவன் தான் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.