பார்த்திபனை அசிங்கப்படுத்திட்டார் பாக்யராஜ்..! தோல்விக்கு பின் வெடிக்கும் பஞ்சாயத்து..

By Asianet News TamilFirst Published Mar 5, 2022, 4:55 AM IST
Highlights

பார்த்திபன், பாண்டியராஜன் இருவருக்கும் தோல்வி மட்டுமே மிச்சம். இது தேவையா பாக்யராஜ்?’ என்று விளாசித் தள்ளியுள்ளனர்

ஏஷியாநெட் தமிழ் தளம் ஏற்கனவே சொல்லியிருந்தது போல் தமிழக முதல்வரின் மகனும், தி.மு.க.வின் இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின், மெகா பட்ஜெட் படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். தி.மு.க. ஆட்சியமைக்கும் முன்பே அருண்ராஜா காமராஜ் படத்தில் கமிட் ஆகி ஒரு கெத்து கொடுத்தவர், இதோ இப்போது அரசியலில் பீக்கில் இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தான் ஹீரோவாக நடிக்க, பகத் பாசில் காம்பினேஷனில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, வடிவேலுவுடன் இணைந்து ‘மாமன்னன்’ படத்தை  துவக்கியுள்ளார். இதற்கு இசை…இசைப்புயல் ரஹ்மான்! என்பதுதான் ஹைலைட்டே.

ஆக ஏஷியாநெட் தமிழ் சொல்லியது நெத்தியடியாக பலித்திருக்கிறது இங்கும்.

சரி வேறு மேட்டருக்கு போவோம்…..

அதாவது சமீபத்தில் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில், ஏற்கனவே அப்பதவியில் இருந்த ஆர்.கே.செல்வமணியே வென்றுள்ளார். அவரது அணியை எதிர்த்துப் போட்டியிட்ட இயக்குநர் கே.பாக்யராஜின் அணி  தோல்வியடைந்துள்ளது.

குறிப்பாக, பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமா பயின்ற பார்த்திபன், அவரது அணியில் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு தோற்றுள்ளார். தோற்றுப் போன பார்த்திபன் தன் சோஷியல் மீடியா பக்கங்களில், தனக்கு அந்த  தேர்தலில் போட்டியிட ஆர்வமே இல்லை, தனது குருநாதர் பாக்யராஜ் சொன்னதுக்காக மட்டுமே போட்டியிட்டேன், வாக்குகள் கூட யாரிடமும் கேட்கவில்லை! என்று தனது  மன வருத்தத்தை  ஓப்பனாக பதிவிட்டிருந்தார். இதை ‘சினிமா துறையில் நல்ல பெயர் சேர்த்து வைத்திருக்கும் சாதனையாளனான தன்னை தேவையில்லாமல் தேர்தலில் இழுத்துவிட்டு, இப்படி அசிங்கப்படுத்திவிட்டார் பாக்யராஜ்! என்பதாகவே பார்த்திபனின் புலம்பல் உள்ளது. பாக்யாவின் இன்னொரு சிஷ்யரான பாண்டியராஜனும் இப்படி அவரது அணியில் போட்டியிட்டு தோற்றுள்ளார்.

ஆக, தான் குரு எனும் பழைய அதிகாரத்தை இப்பவும் காட்டி, தனது பழைய சிஷ்யர்களை இப்படி தேர்தலில் நிற்க வைத்து, அசிங்கப்படுத்தியுள்ளார் பாக்யராஜ்! பார்த்திபன், பாண்டியராஜன் இருவருக்கும் தோல்வி மட்டுமே மிச்சம். இது தேவையா பாக்யராஜ்?’ என்று விளாசித் தள்ளியுள்ளனர்.

பார்த்திபனுக்கு தான் என்னவோ பிரஷர் கொடுத்தும், நச்சரித்தும், வற்புறுத்தியும் தேர்தலில் நிற்க வைத்தது போல் அவர் போட்டிருக்கும் பதிவுகள் சித்தரிப்பதாலும், அதைத்தொடர்ந்து எழும் விமர்சனங்கள் தன்னை வெகுவாக காயப்படுத்துவதாகவும் கூறி ஓவராக அப்செட்டாகியுள்ளார் பாக்யராஜ். ஆனால் இதை  பார்த்திபன் கண்டுகொண்டதாக  தெரியவில்லை.

குரு மற்றும் சிஷ்யர்களுக்குள் உருவாகியிருக்கும் இந்த மனக்கசப்பு எப்படி முடியுமோ?

click me!