
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் முதலில் எதிர்பார்க்கப்பட்டவர் ஜூலியாக இருந்தாலும், நாளடைவில் சிறியவர்கள், இளைஞர்கள், என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் ஓவியா.
இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்களின் மனதை வென்றாலும், மற்ற போட்டியாளர்களால் எதிரியாக பார்க்கப்பட்டு. ஒதுக்கப்பட்டும், ஆரவ் மீது ஏற்பட்ட காதல் தோல்வியடைந்ததால் மனம் வெறுத்து தற்கொலை வரை முயன்று வெளியேறினார்.
மேலும் மீண்டும் மற்ற போட்டியாளர் திரும்ப வந்த போது கூட பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை என்றார். ஆனால் விரைவில் இந்த நிகழ்ச்சி 100 நாட்களை எட்ட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் யார் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் கடைசிநாள் நிகழ்ச்சியில் ஓவியா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல எதிர்பாராத மாற்றங்கள் அரங்கேறி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பாப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.