அவரை யாரும் எட்டி உதைக்கல.? அதெல்லாம் பொய்.. பெங்களூரு போலீஸ் விளக்கம்.. வாய் திறப்பாரா விஜய் சேதுபதி.?

By Asianet TamilFirst Published Nov 3, 2021, 11:01 PM IST
Highlights

வீடியோவில் விஜய் சேதுபதியை உதைப்பதும், அவர் உடனே திரும்பி ரியாக்ட் செய்வதும் தெளிவாகத்தெரியும் நிலையில், பெங்களூரு போலீஸார் இதை மறுத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக விஜய் சேதுபதி வாய் திறந்தால்தான் உண்மை தெரிய வரும். 

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எகிறி எட்டி உதைத்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று பெங்களூரு போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.  

இன்று மாலை சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலானது. விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சூழ நடந்து செல்லும் நடிகர் விஜய் சேதுபதியை, பின்னால் ஓடி வந்த ஒரு நபர்  ஒருவர், எகிறி எட்டி உதைத்த காட்சியைப் பார்த்து எல்லோரும் திடுக்கிட்டுப் போனார்கள். நடிகர் விஜய் சேதுபதி எங்கு தாக்கப்பட்டார், ஏன் தாக்கப்பட்டார் என்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் எழுந்தது. விஜய் சேதுபதி தாக்கப்பட்டதை ஒரு சாரர் மகிழ்ந்தும் பலர் கண்டனம் தெரிவித்தும் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி பெங்களூரு விமான நிலையத்தில் தாக்கப்பட்டதும், படப்பிடிப்புக்காக அவர் பெங்களூர் சென்றிருப்பதும் தெரிய வந்தது. மேலும் ஒரு போதை ஆசாமிதான் அவரை தாக்கியதாகவும், அந்த ஆசாமியை போலீஸார் கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மையில்லை என்று பெங்களூரு போலீஸார் அதிரடியாக விளக்கம் அளித்துள்ளனர். 

விமான நிலையத்தில் விஜய் சேதுபதிக்கு வழி ஏற்படுத்தும் முயற்சியில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் விஜய் சேதுபதியின் உதவியாளர் மீதுதான் தாக்குதல் நடந்ததாகவும் பெங்களூரு போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக இரு தரப்பும் பேசி சமாதானம் ஆனதால், வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், வீடியோவில் விஜய் சேதுபதியை உதைப்பதும், அவர் உடனே திரும்பி ரியாக்ட் செய்வதும் தெளிவாகத்தெரியும் நிலையில், பெங்களூரு போலீஸார் இதை மறுத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக விஜய் சேதுபதி வாய் திறந்தால்தான் உண்மை தெரிய வரும். 

click me!