நிவின்பாலி - அஞ்சலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்கிய இயக்குனர் ராம்..!!

By manimegalai aFirst Published Oct 5, 2021, 2:12 PM IST
Highlights

இயக்குனர் ராம் (Director Ram) இயக்கத்தில், முதல் முறையாக நிவின் பாலி (Nivin Pauly) நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று ராமேஸ்வரத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

இயக்குனர் ராம் இயக்கத்தில், முதல் முறையாக நிவின் பாலி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நேற்று ராமேஸ்வரத்தில் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

'அமைதிப்படை-2 ', 'கங்காரு', 'மிக மிக அவசரம்', உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தற்போது சிலம்பரசன் TR, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

தனது திரையுலக பயணத்திலேயே மிகப்பெரிய படமாக இதை எதிர்பார்க்கிறார் சிலம்பரசன் TR.. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதுவரை சுமார் 8 மில்லியன் பார்வைகளைக் கடந்து விட்டது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய்னா சும்மாவா...!! வெள்ளை நிற உடையில் பாரிஸ் ஃபேஷன் வீக்கை தெறிக்க விட்ட போட்டோஸ்..!

இதனைத் தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இயக்குநர் ராம் டைரக்சனில் தனது ஐந்தாவது படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது..

மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க, அஞ்சலி கதாநாயகியாக நடிக்கின்றார். கற்றது தமிழ், பேரன்பு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ராம் இயக்கத்தில் நடிக்கிறார் அஞ்சலி.  மேலும் இந்தப்படத்தில் சூரி  முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.

மேலும் செய்திகள்:வெள்ளை நிற டைட் பேன்ட்... ஸ்லீவ் லெஸ் டாப் அணிந்து முரட்டு கவர்ச்சியில் மிரட்டும் ரம்யா பாண்டியன்! போட்டோஸ்

 

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.தரமான படங்களை இயக்கி, தேசிய விருதும் பெற்ற இயக்குநர் ராமின் இந்த புதிய படம் துவங்கியது முதலே, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

click me!