நடிகைகள் சம்பளத்தை உயர்த்திக் கேட்டால் ஓரங்கட்டப்படுவார்கள்... வாழை பட நடிகை நிகிலா விமல் பளீச் பேட்டி

Published : Oct 31, 2025, 04:20 PM IST
Nikhila Vimal

சுருக்கம்

ஒரு நடிகையாக சினிமாவில் உள்ள சவால்கள் குறித்து வாழை பட நடிகை நிகிலா விமல் பேசியுள்ளார். அவரது நடிப்பில் அடுத்ததாக 'பெண் கேஸ்' திரைப்படம் வெளியாக உள்ளது.

Nikhila Vimal Reveals the Harsh Reality : மலையாளத்தில், 'ஞான் பிரகாஷன்', 'ஜோ அண்ட் ஜோ', 'குருவாயூரம்பல நடையில்', 'நுணக்குழி' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தவர் தான் நிகிலா விமல். மலையாளம் மட்டுமல்லாமல் தமிழிலும் இவர் பிஸியாக இருக்கிறார். கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கிய 'வாழை' படத்தில் டீச்சராக நடித்திருந்தார். அதில் இவரது நடிப்பு பெரிதும் கவனிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு நடிகையாக சினிமாவில் உள்ள சவால்கள் குறித்து நிகிலா விமல் பேசியுள்ளார்.

முதல் படம் கிடைத்துவிட்டால், இரண்டாவது பட வாய்ப்புக்காகப் பெரிய அளவில் போராட வேண்டியிருக்கும் என்று அவர் கூறுகிறார். அவர் பேசியதாவது : “சமீபத்தில் இங்குள்ள பிரபலமான ஒருவர் என்னிடம், 'ஏன் மலையாள சினிமாவில் நடிகைகள் நிலைத்து நிற்பதில்லை?' என்று கேட்டார். அதற்கு நான், 'நீங்கள் ஒரு புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தி முதல் படம் கொடுப்பீர்கள்.

அந்த நடிகை எப்படியோ கஷ்டப்பட்டு இரண்டாவது படத்திலும் நடித்துவிடுவார். மூன்றாவது படத்திற்கு வரும்போது இயல்பாகவே சம்பளத்தை உயர்த்தி கேட்பார். அது உங்களுக்குப் பிடிக்காது. உடனே அடுத்த புதுமுக நடிகையைத் தேடிப் போவீர்கள். மற்றவர்கள் இங்கே போராடிக் கொண்டிருப்பார்கள். உண்மையாகச் சொல்கிறேன், காக்கநாட்டில் சென்று கூவினால், ஒரு பிளாட்டில் இருந்து குறைந்தது மூன்று புதுமுக நடிகைகளாவது வெளியே வருவார்கள்' என்று கூறினேன்," என நிகிலா விமல் தெரிவித்துள்ளார்.

நடிகை நிகிலா விமல் சொன்ன பகீர் தகவல்

தொடர்ந்து அவர் பேசுகையில் "இது பயங்கரமான போராட்டம். எல்லோரும் நினைப்பது போல் எளிதான விஷயம் அல்ல. பலர் இன்ஃப்ளூயன்சர், மார்க்கெட்டிங் போன்ற விஷயங்களால் தான் தாக்குப்பிடிக்கிறார்கள். இல்லையென்றால் என்ன செய்வார்கள்? அப்போதும், இன்ஃப்ளூயன்சரா அல்லது நடிகையா என்ற போராட்டமும் வரும். யாராவது கொச்சிக்குக் குடிபெயரலாமா என்று கேட்டால், வேண்டாம் என்றுதான் சொல்வேன். மூன்று, நான்கு படங்கள் செய்த பிறகு அதைப் பற்றி யோசிக்கலாம் என்பேன். இல்லையென்றால் கொச்சியில் வந்து கஷ்டப்பட வேண்டியிருக்கும். நான் சமீபத்தில்தான் கொச்சிக்கு வந்தேன். வேலை இல்லை என்றால் உடனே ஊருக்குப் போய்விடுவேன். ஆறு வருடங்களுக்கு முன்புதான் நான் கொச்சிக்கு மாறினேன்," என்கிறார் நிகிலா விமல்.

இதற்கிடையில், நிகிலாவின் அடுத்த படம் 'பெண் கேஸ்'. திரைக்கதை எழுத்தாளர் ஃபெபின் சித்தார்த் முதல் முறையாக இயக்கும் இப்படத்திற்கு, ஃபெபின் மற்றும் ரஷ்மி ராதாகிருஷ்ணன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். நவம்பரில் வெளியாகும் இப்படத்தில் நிகிலாவுடன் ஹக்கீம் ஷாஜஹான், அஜு வர்கீஸ், ரமேஷ் பிஷாரடி, இர்ஷாத் அலி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 'பெண் கேஸ்' என்ற வித்தியாசமான தலைப்பு, படத்தின் கதைக்களம் குறித்த விவாதங்களை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதனால், படத்தின் டீசர் போஸ்டர் மற்றும் அதிகாரப்பூர்வ போஸ்டர் சமூக வலைதளங்களில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம்..! இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!
மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ