தலைவா இறைவான்னு வருவாங்க, 21 வீட்டுக்காரங்களும் கஷ்டப்படுறாங்க – ரஜினியின் பக்கத்து வீட்டார் வேதனை!

By Rsiva kumarFirst Published Jan 15, 2024, 5:17 PM IST
Highlights

தைத் திருநாளாம் பொங்கல் திருநாளான இன்று போயஸ் கார்டனில் உள்ள தனது வீடு முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த நிலையில், அங்கு கூடிய ரசிகர்களால் பக்கத்து வீட்டாருக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறிய பெண்மணியின் வீடியோ வெளியாகி வருகிறது.

தை முதல் நாள் உழைப்பின் திருநாளாக – தமிழர் பெருநாளாக கொண்டாடி வருகிறார்கள்.  வீடுகளில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி, கரும்பு, பழங்கள், புது பானையில் பொங்கலிட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். அந்த வகையில் தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

Adei Mentalans yenda yeppo paru pichakkaran mari Rajini veetu vasal la poi nikuringa.. unga peran, pethi kuda poi celebrate pannunga da 😒

Indha amma pavam.. kaari thupuranga 👌😂
- Naangalum tax katurom but oru advantage kuda illa 😕
- Festival day adhuvuma early morning enga…

— 𝙍 𝘼 𝙋 𝙏 𝙊 𝙍 (@Raptor_VJ)

Latest Videos

 

இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் தனது வீட்டு முன் திரளும் ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார். அந்த வகையில், தைத்திங்கள் முதல் நாளான பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை போயஸ் கார்டன் பகுதியில் இருக்கக்கூடிய நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு ரசிகர்கள் அவரைக் காணக்கூடியிருந்தனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் முன்பு கையசைத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

அந்த மாதிரி காட்சிகள் நடிக்கும்போது... முத்தக்காட்சி & படுக்கையறை சீன்ஸ் குறித்து மனம் திறந்த நடிகை அஞ்சலி!

இதன் தொடர்ந்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க்கையில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கை நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கும் என ரஜினி தெரிவித்தார்.

ஏலியனோடு ஒரு இன்ப பொங்கல்.. அயலான் ஸ்பெஷல் தை திருநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - Cute Family Pic இதோ!
 

இந்த நிலையில், தான் ரஜினிகாந்த் வீட்டின் பக்கத்து வீட்டார், தலைவா இறைவான்னு வருவாங்க….எங்களை மாதிரி இங்கு இருக்கும் 21 வீட்டுக்காரங்களும் கஷ்டப்படுற மாதிரி ஒருத்தரும் கஷ்டப்பட மாட்டாங்க. உங்க கேட்ட திறந்து உள்ளே விடுங்க. உங்க கேட்டு திறக்க கூடாது. எங்க வாசல் மூடி இப்படியே இருக்கணும். உங்க கேட்டை திறந்து எல்லோரையும் உள்ளே விடுங்கள் என்று ரஜினிகாந்த் வீட்டின் செக்யூரிட்டிகார்டிடம் அந்த பெண்மணி இவ்வாறு கூறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நியூமராலஜி பார்த்து பெயரை மாற்றினாரா Prabhass? The Raja Saab போஸ்டர் பிரச்சனை - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

வருசத்தில் ஒரு 5 அல்லது ஆறு முறை தான் தலைவரை பாரக்க அதிகம் வருவாங்க

அது கூட சில மணி நேரம் மட்டும் தான்

இதே ஒரு அரசியல்வாதி, வீடா இருந்தா இந்தம்மா வீட்டு முன்னாடி தான் சேர் போட்டு உக்காந்து இருப்பாங்க 😂

எப்பவோ வித்திட்டு போயி இருக்கும் வீட்டை 😂

பொறுமல் தான் 😂

— KPN 🇮🇳 🇮🇳 MUSIC AND POLITICS (@EngineerKpn)

 

click me!