தேசிய விருதில் பாரபட்சம்... உலகநாயகனின் வெளிப்படையான கருத்து...

Asianet News Tamil  
Published : Apr 15, 2017, 07:19 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
தேசிய விருதில் பாரபட்சம்... உலகநாயகனின் வெளிப்படையான கருத்து...

சுருக்கம்

national award controversy kamal open talk

கடந்த சில நாட்களுக்கு முன் 64வது தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தேசிய விருது கொடுக்கப்படுவதில்லை பாரபட்சம் பார்க்கப்படுவதாக கூறி இருந்தார், இந்த தகவல் பல பிரபலங்களையும் அதிச்சிக்குள்ளாக்கியது.

 மேலும் இவர் கூறிய கருத்துக்கு இயக்குனர் பிரியதர்ஷன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து  மீண்டும் முருகதாஸ் தனது டுவிட்டரில் இது தன்னுடைய கருத்து மட்டுமல்ல என்றும் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கருத்து என்றும் வீணாக விவாதம் செய்வதை விட்டுவிட்டு உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் என்று சாட்டையடி பதில் கொடுத்திருந்தார்.

இதுகுறித்து பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா சமீபத்தில் கூறியபோது, விருதுகள் வழங்கப்படுவதில் இன்று நேற்றல்ல, பல காலமாக முறைகேடுகள் நடந்து வருவதாகவும், இதுவும் ஒருவகை ஊழல் என்றும் ஆனால் இந்த ஊழல் குறித்து யாரும் பெரிதாக பேசுவதில்லை' என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து உலகநாயகன் கமல்ஹாசனிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், '12 பேர் முடிவு செய்தது. அதில் நல்லதும் இருக்கலாம். கெட்டதும் இருக்கலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

OTTக்கு பார்சல் செய்யப்பட்ட யூத்... அதன் லைஃப் டைம் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
TRP ரேஸில் டாப் 5 இடங்களை ஆக்கிரமித்த சன் டிவி சீரியல்கள்; கடும் சரிவை சந்தித்த விஜய் டிவி