'இப்பதான் என்மகன் மகிழ்ச்சியாக இருக்கிறான்'..சமந்தா - நாகசைதன்யா பிரிவு குறித்து மனம் திறந்த நாகார்ஜுனா

Published : Sep 17, 2022, 05:26 PM ISTUpdated : Sep 17, 2022, 09:11 PM IST
'இப்பதான் என்மகன் மகிழ்ச்சியாக இருக்கிறான்'..சமந்தா - நாகசைதன்யா பிரிவு குறித்து மனம் திறந்த நாகார்ஜுனா

சுருக்கம்

சமந்தா உறவு முறிவு குறித்து இதுவரை பேசாத நாகார்ஜுனா சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

சமந்தா தற்போது முன்னணி தென்னிந்திய நாயகிகளில் முதல் வரிசையில் இடம் பிடித்து விட்டார் சமந்தா. முன்னதாக குடும்ப குத்து விளக்கு போல பவ்யமாக அறிமுகமான சமந்தா தற்போது கவர்ச்சி நாயகிகளுக்கு டப் கொடுத்து வருகிறார். முன்னதாக நாகசைதன்யாவை காதல் கரம் பிடித்த சமந்தா நான்கு வருடம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தார். பின்னர் மனக்கசப்பு காரணாமாக கடந்தாண்டு அக்டோபரில் இவர்கள் பிரிவதாக ஒன்றாக சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். மனம், மஜிலி உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ள சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் செய்திகளுக்கு... கண்ணம்மாவை கொலைசெய்ய துணிந்த தீவிரவாதி..கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் டீம் 

விவாகரத்து பெற்ற பிறகு அவரவர் பாதையில் பிஸியாக சென்று கொண்டிருக்கின்றநற்.  சமீபத்தில் சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். தற்போது பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் பிசியாக இருக்கிறார். அதோடு யசோதா, குஷி வஉள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் உருவாகியுள்ளது. அதேபோல நாகசைதன்யா பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சமந்தா உறவு முறிவு குறித்து இதுவரை பேசாத நாகார்ஜுனா சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். பிரம்மாஸ்திர படத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சைதன்யாவின் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த நாகார்ஜுனா, எனது முதல் சந்தோசம் என் மகன் நாக சைதன்யாவின் மகிழ்ச்சிதான் என்று கூறியுள்ளார். அவர் இப்ப மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் எதிர்பார்ப்பது அவ்வளவுதான். அது எனக்கு போதும். நாக சைதன்யாவுக்கு ஏற்பட்ட அனுபவம் துரதிஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு... பிரபல ஹீரோயின்களுக்குள் சண்டை? மனமுடைந்து சீரியலை விட்டு விலகி ராதிகா 

சமந்தாவுடன் தனது திருமண முறிவு குறித்து நாக சைதன்யா கூறுகையில் எங்களுக்குள் எல்லாம் முடிந்து விட்டது. நாங்கள் அதைப் பற்றி கவலைப்பட முடியாது.  எங்கள் வாழ்க்கையில் எதுவும் இல்லை எத்தனை தடவை சொன்னாலும் அதிலும் ஏதாவது புதிதாக கண்டுபிடித்து கேட்பார்கள் என சலிப்பாக பேசியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!