நடிகை த்ரிஷாவுக்காக கதை, திரைக்கதை எழுதும் ஏ.ஆர்.முருகதாஸ்...

By Muthurama LingamFirst Published Apr 11, 2019, 5:02 PM IST
Highlights

‘தர்பார்’ பட ஷூட்டிங் பிசியிலும் நடிகை த்ரிஷாவை ஹீரோயினாக வைத்து தனது உதவியாளர் இயக்கும் ஒரு படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி, தயாரிப்பாளரையும் தாரை வார்த்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

‘தர்பார்’ பட ஷூட்டிங் பிசியிலும் நடிகை த்ரிஷாவை ஹீரோயினாக வைத்து தனது உதவியாளர் இயக்கும் ஒரு படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி, தயாரிப்பாளரையும் தாரை வார்த்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.

‘எங்கேயும் எப்போதும்’ ஹிட் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்து அடுத்து ‘இவன் வேற மாதிரி’,’வலியவன்’ படங்களை இயக்கியவர் சரவணன். ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிண்டவர். இடையில் ஒரு சிறிய விபத்தில் சிக்கியதால் படங்கள் இயக்காமல் ஓய்வெடுத்த வந்த சரவணன் மீண்டும் உடல்நலம் தேறி படம் இயக்கத்தயாரானபோது, அவருக்குத் தானே முன்வந்து உதவத் தயாரானர் குருநாதரான முருகதாஸ்.

அதன்படி நடிகை த்ரிஷாவை வைத்து தான் இயக்க முடிவெடுத்திருந்த ஒரு ஹீரோயின் சப்ஜெக்டை சரவணன் இயக்கக்கொடுத்ததோடு, ரஜினி பட பிசிக்கு நடுவில் அக்கதைக்கு திரைக்கதையும் அமைத்துக்கொடுத்திருக்கிறார். தற்போது லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

முருகதாஸின் ‘தர்பார்’ படத்தைத் தயாரிக்கும் அதே லைகா புரடக்‌ஷன்ஸே இப்படத்தையும் தயாரிக்கிறது எனும்போது தயாரிப்பாளரை சிபார்சி செய்தவர் யார் என்பதை சொல்லியா தெரியவேண்டும்?

click me!