மும்பையை சேர்ந்த பிரபல மாடலும், நடிகையுமான அவந்திகா காவ்கர் தனது நிர்வாண புகைப்படங்களை ஊடகத்திற்கு விற்ற சென்னை இயக்குனர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
மும்பையை சேர்ந்தவர் அவந்திகா காவ்கர். நடிகையும், மாடலுமான அவரின் நிர்வாண புகைப்படங்கள் இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நடிகை அவந்திகா அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது நிர்வாண புகைப்படங்களை அந்த இணையதளத்திற்கு விற்ற இயக்குனர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து முன்னணி இணையத்தளம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவந்திகா, நெட்பிளிக்ஸில் வரும் வெப்சீரிஸ் ஒன்றுக்காக எனது நிர்வாண புகைப்படங்களை சென்னையை சேர்ந்த இயக்குநர் ராகேஷ்நாத் வெங்கட் ராவ் கேட்டார். நானும் அவர் சொன்ன வார்த்தையை எனது நிர்வாண புகைப்படங்களை அவருக்கு அனுப்பினேன்.
எனது நிர்வாண புகைப்படத்தை பார்த்த அவர், முகவும் அழகான செக்சியான தோற்றம் உடைய உங்களது நிர்வாண வீடியோ வேண்டும் இறக்குனரிடம் காட்ட இது தேவைப்படும் என்பதால் நிர்வாணமாக வீடியோ எடுத்து அனுப்புமாறும் கூறினார். நல்ல வேளை நான் வீடியோவை அனுப்பவில்லை. அவர் என்னிடம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்பதை இப்போது தெரிந்து கொண்டேன்.
ராவ் எனது நிர்வாண புகைப்படங்களை மும்பையை சேர்ந்த பிரபல பத்திரிகையிடம் விற்க முயன்றுள்ளார். ஆனால், அவர்கள் வாங்காததால் இணையதளம் ஒன்றிடம் விற்றுவிட்டார். என் போட்டோக்களை விற்பனை செய்ய நான் அவருக்கு அதிகாரம் அளித்ததாக போலி கடிதம் ஒன்று தயார் செய்து அந்த போட்டோக்களை விற்றுவிட்டார்.
அதேபோல அந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்து என்னுடையது இல்லை. என்னை ஏமாற்றி எனது நிர்வாண புகைப்படத்தை விற்ற அந்த இயக்குனர் மீது நான் போலீசில் புகார் அளித்துள்ளேன் என அவந்திகா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவந்திகாவின் மேனேஜர், கோவாவில் பிறந்த ஹாலிவுட் இயக்குனரான ஜேசன் பெர்ணான்டஸ் தான் இயக்கும் வெப்சீரிஸுக்காக நிர்வாண புகைப்படங்களை கேட்டார் என ராவ் கூறினார் என கூறியுள்ளார்.
அதேபோல இயக்குனர் ஜேசன் பெர்ணான்டஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் யாரிடமும் நிர்வாண புகைப்படமோ, வீடியோவோ கேட்கவே இல்லை. வெங்கட் ராவ் என்பவர் என் பெயரை பயன்படுத்தியுள்ளார் என்பதை தெரிந்து கொண்டேன். என் தயாரிப்பு நிறுவனம் சர்வதேச வெப்சீரிஸுக்காக பத்துக்கும் மேற்பட்ட பெண்களை ஒப்பந்தம் செய்து வருகிறது. ஆனால் இதுவரை யாரிடமும் நிர்வாண புகைப்படங்களை கேட்டது இல்லை, அவர்களும் அனுப்பியதும் இல்லை என ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.