மீண்டும் ஹூரோவாக களமிறங்கும் மெர்சல் வில்லன்...

First Published Dec 11, 2017, 9:59 AM IST
Highlights
Mersal Villain acts as a hero


இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் புதிய படத்தில் மீண்டும் ஹீரோவாக களமிறங்குகிறார் மெர்சல் வில்லன் எஸ்.ஜே.சூர்யா.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கஸாண்ட்ரா, நந்திதா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.

திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் பைனான்ஸ் பிரச்சனையால் இன்னும் வெளிவராமல் உள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் "இறவாக்காலம்" படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார்.

இந்தப் படத்தையும் தொடர்ந்து "ஒரு நாள் கூத்து" படத்தின்  மூலம் புகழ் பெற்ற நெல்சன் வெங்கடேசன் இயக்கும் ஒரு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.

சமீப காலங்களாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பினராலும் வெகுவாக ஈர்க்கப்பட்ட நடிகர் என்ற பெயரை சம்பாதித்து விட்டார் எஸ்.ஜே.சூர்யா.

இந்த நிலையில் நெல்சன் வெங்கடேசன் இயக்கும் படத்தில் ஹீரோவாக மீண்டும் களமிறங்குகிறார் எஸ்.ஜே.சூர்யா.

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் எஸ்.ஆர்.பிரபு இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரித்விகா ஆகியோர் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

tags
click me!