
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டுள்ளவர், பிரபல காமெடி நடிகை மதுமிதா. இவருக்கு தற்போது பிக்பாஸ் வீடே எதிரியாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அபிராமி என்றாலும், மது சொல்லவருவது என்ன என்பதை கூட கேட்காமல் அனைவருமே அபிராமிக்கு மட்டுமே சப்போர்ட் செய்து வருகிறார்கள்.
இதனால் தன்னுடைய மன வேதனையை யாரிடமும் சொல்ல முடியாமல், குட்டி சிவ லிங்கத்தை வைத்து அழுது கொண்டே அதனுடன் பேசுகிறார். "இன்னைக்கு நீ என் கனவுல வரியா? எதாவது ஒரு விஷயம் எனக்கு தெரியணும். நீ தப்புனு சொன்னாலும் நான் ஏத்துக்குவேன். சரினு சொன்னாலும் ஏத்துக்குவேன். என் மனசுல கல்லை தூக்கி வைத்தது போல வெயிட்டாக இருக்கு. வீட்ல பிரச்சனைனா பரவால.. இங்கே எனக்கு வீடே பிரச்சனையா இருக்கு" என கண்ணீருடன் அழுதபடி பேசுகிறார் மதுமிதா.
பிக்பாஸ் வீடே தனக்கு எதிராக திரும்பி விட்டதாக நினைத்து, மனதளவில் இவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், எலிமினேஷன் ஆகாவிட்டாலும், இவரே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பிருப்பதாக மக்கள் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.