மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை... ரிவைசிங் கமிட்டியும் கைவிரித்தது...!

By vinoth kumarFirst Published Nov 8, 2018, 3:54 PM IST
Highlights

ஜல்லிக்கட்டு போராளிகளின் உணர்வுகளை மய்யக்கருத்தாகக் கொண்டு இயக்கப்படுள்ள ‘மெரினா புரட்சி’ படத்தை ஏற்கனவே சென்சார் போர்டு காரணம் சொல்லாமல் நிராகரித்தநிலையில் தற்போது ரிவைஸிங் கமிட்டியும் நிராகரித்துள்ளது.

சமீபத்தில் ரிலீஸாகி பரபரப்பாக பந்தாடப்பட்டுவரும் ‘சர்கார்’ உட்பட டஜன்கணக்கான படங்கள் தங்கள் படத்தை சமர்ப்பித்து வருவது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்காக. ஆனால் அதே ஜல்லிக்கட்டு போராளிகளின் உணர்வுகளை மய்யக்கருத்தாகக் கொண்டு இயக்கப்படுள்ள ‘மெரினா புரட்சி’ படத்தை ஏற்கனவே சென்சார் போர்டு காரணம் சொல்லாமல் நிராகரித்தநிலையில் தற்போது ரிவைஸிங் கமிட்டியும் நிராகரித்துள்ளது.

இதுகுறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம்.எஸ்.ராஜ்,’’ ஏற்கனவே காரணம் சொல்லாமல் சென்ஸார் போர்டு எங்கள் படத்தை நிராகரித்த நிலையில், தற்போது படத்தை பார்த்த நடிகை கவுதமி தலைமையிலான Revising Committee குழு எந்த காரணமும் சொல்லாமல் மீண்டும் தடை விதித்துள்ளனர். 

Indian Cinematograph Act 1983 விதியின்படி Revising Committee மறுப்பு தெரிவித்தால் FCAT எனப்படும் டெல்லி டிரிப்யூனல் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு 2nd Revising Committee க்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.

காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது. 

தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை  முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க நாச்சியாள் பிலிம்ஸ்  குழுவினர் உறுதியுடன் இருக்கிறோம்’ என்று தெரிவிக்கிறார்.

click me!