
சசிகலாவை எதிர்த்து நேற்று இரவு முதல் முறையாக பொங்கி எழுந்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இவருக்கு ஆதரவாக பலர் தற்போது குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும் இதுவரை சசிகலாவை எதிர்க்க முடியாதவர்கள்கூட தற்போது ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கருத்துக்களையும் , ஆதரவையும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்சனை என பலவற்றிலும் உண்மைக்கு ஆதரவாக குரல் கொடுத்து தைரியமாக கேள்வி கேட்டவர்களில் ஒருவர் நடிகர் மன்சூர் அலிகான். அவர் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து சற்றுமுன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒரு தந்தையை போல கிண்டல்களை எதிர்கொண்டவர் ஓ. பன்னீர்செல்வம். அத்தகைய நல்ல உள்ளம் படைத்த ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் அணி திரள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.