"என் செல்போனை எடுத்து தவறாக மெசேஜ் அனுப்பி விட்டார்கள்" - மனோபாலா கமிஷனரிடம் புகார்

First Published Jan 12, 2017, 1:03 PM IST
Highlights

நான் சூட்டிங்கில் இருந்த போது எனது செல்போனை எடுத்து யாரோ தவறாக இது போன்ற மெசேஜை அனுப்பி விட்டார்கள் அவர்களை கண்டு பிடியுங்கள் என்று இயக்குனர் மனோபால கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். 

இயக்குனர் மனோ பாலா அதிமுகவின் தலைமை கழக பேச்சாளராக இருக்கிறார். இவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை யார் வழிநடத்தி செல்வது என்ற பிரச்சனை வந்த போது சசிகலாதான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமைச்சர்கள் ஒருமனதாக முடிவெடுத்தனர்.

 

அனந்தராஜ் ,விந்தியா , நாஞ்சில் சம்பத் போன்றோர் எதிர்த்தனர் பேட்டி அளித்து விலகி நின்றனர். ஆனால் நாஞ்சில் சம்பத் பின்னர் மேலிடம் அழைத்ததன் பேரில் இணைந்தார். இந்நிலையில் அதிமுக தலைமை கழக பேச்சாளரும் , இயக்குனரும் , நடிகர் சங்க நிர்வாகியுமான மனோபாலா  தனது நெருங்கிய நண்பர்கள், சினிமா பிரபலங்கள் நடிகர் சங்க நிர்வாகிகள்  இருக்கும் SIAA என்ற வாட்ஸ் அப் குரூப்பில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா , முதல்வர் ஓபிஎஸ் பற்றிய சர்ச்சைக்குரிய கிண்டல் வாசகத்தை பதிவு செய்திருந்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை கிண்டலடித்து அதிமுக தலைமை கழக பேச்சாளர் , இயக்குனர்  மனோபாலா  வாட்ஸ் அப்பில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்ததாக அவர்மீது போயஸ் கார்டன் , தலைமை கழகம் , காவல் ஆணையரிடம் ஆலந்தூர் அதிமுக பிரமுகர் சினி சரவணன் என்பவர் புகார் அளித்தார் .

அஇஅதிமுக  நட்சத்திர பேச்சாளரும்  திரைப்பட  நடிகருமான     மனோ பாலா அவர்கள் தமிழக  முதல்வர்  அண்ணன் ஓ. பன்னீர்செல்வம்  அவர்களையும்   இரண்டு  கோடி தொண்டர்களை அடங்கிய  அஇஅதிமுக  வின் பொது செயலளார்  சின்னமா அவர்களையும்   சினிமா  நடிகர்களின்  WhatsApp  குரூப்பில்   கேலி கிண்டல்  செய்து தவரான  வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் மனோபாலா கட்சியின் நட்சத்திர பேச்சாளர் அவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தால் நடிகர் ஆனந்தராஜ் போல் பேட்டி அளித்து கட்சியை விட்டு வெளியேறட்டும். ஆனால் கட்சிக்குள் இருந்து கொண்டே இது போன்று அவரது குரூப்பில் பதிவு போடுவது கட்சி விரோத செயலாகும். கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் செயலாகும். ஆகவே இது பற்றி கட்சி தலைமையிடமும், போயஸ் கார்டனிலும் புகார் அளித்தேன் என்று தெரிவித்து புகார் அளித்தார்.

இந்த விவகாரம் ஊடகங்களில் பெரிதாக வெளியானது. பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியினர் மத்தியில் பெரிதாக விவாதிக்கப்பட்டது.

 இந்த விவகாரம் மனோபாலா காதுக்கும் போனது இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இன்று கமிஷனர்  அலுவலகத்து வந்தார் புகார் ஒன்றை அளித்தார். அதில் தான் சூட்டிங்கில் இருந்தபோது யாரோ விஷமி தன்னுடைய செல்போனை எடுத்து அதில் இந்த மெசேஜை அனுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் வெளியில் வந்த பிறகுதான் எனக்கு உண்மை தெரியும். ஆகவே என் செல்போனை எடுத்து இந்த மெசேஜை அனுப்பியவர்கள் யார் என கண்டுபிடித்து அவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.

click me!