
என் அம்மா ஐஸ்வர்யா ராய் தான் , அவருக்குதான் நான் பிறந்தேன் அவருடன் தான் இருப்பேன் என இளைஞர் ஒருவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருவது பாலிவுட்டில் சர்ச்சையை கிளப்பியுள்ளது . கடந்த ஆண்டு மங்களூரைச் சேர்ந்த சங்கீத் குமார் என்பவர் தனது அம்மா ஐஸ்வர்யா ராய்தான் எனவும், அவர் கடந்த 1988 ஆம் ஆண்டு அவருக்கு 15 வயது இருக்கும்போதே செயற்கை கருத்தரிப்பு மூலம் என்ன பெற்றெடுத்தார் . பிறகு 2007 ஆம் ஆண்டு தான் அவர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
இப்போது அவர் மும்பையில் வசித்து வருகிறார் , தற்போது நான் தனிமையில் இருக்கிறேன் , எனக்கு என் அம்மா ஐஸ்வர்யாராயுடன் வசிக்க வேண்டும் , அவருடன் நான் இருக்க வேண்டும் . நான் என் அம்மாவை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன், என கடந்தாண்டு முழுவதும் பேட்டிமேல் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பினார் . அதே நேரத்தில் ஐஸ்வர்யாராய்தான் தன் தந்தாய் என்பதற்கு சங்கீத் குமாரிடம் எந்த ஆதாரமும் இல்லை , இந்நிலையில் இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது . அதாவது சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள சங்கீத் குமார், என்னை இரண்டு வயதுவரை என் பாட்டி பிருந்தா மற்றும் தாத்தா கிருஷ்ணராஜ் ஆகியோர் வளர்த்தனர்.
பிறகு என் தந்தை வடிவேலு ரெட்டி விசாகப்பட்டினத்திற்கு என்னை அழைத்துச் சென்று விட்டார் அதன்பிறகு நான் அங்கேயே வளர்ந்தேன் , ஐஸ்வர்யா ராய் தான் என்தாய் என்பதற்கான ஆதாரங்களை எனது உறவினர்கள் அழித்துவிட்டனர் . அதன்பிறகு நான் அங்கேயே இருந்தேன் என் தாய் ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து நான் இருக்கவேண்டும் . நான் அவருடன் தான் இருப்பேன் எனக்கூறி பாலிவுட்டை பரபரப்பாக்கி இருக்கிறார் . கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அவர் புகார் கூறிவரும் நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.