மாளவிகா மோகன் மனதில் பாலை வார்த்த செய்தி! சோகம் மறந்து சந்தோஷத்தை பகிர்ந்த நடிகை!

By manimegalai aFirst Published May 27, 2020, 4:22 PM IST
Highlights

நடிகை மாளவிகா மோகன் தற்போது தன்னுடைய மனதிற்கு நிம்மதி கொடுத்த, குடும்ப தகவல் பற்றி கூறியுள்ளார்.
 

நடிகை மாளவிகா மோகன் தற்போது தன்னுடைய மனதிற்கு நிம்மதி கொடுத்த, குடும்ப தகவல் பற்றி கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். இந்த படத்தை தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே இவருக்கு அடித்தது ஜாக்பாட்.  அதிரடியாக தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருக்கும் 'மாஸ்டர் ' படத்தின் கதாநாயகியாக மாறினார். இவருக்கு கிடைத்த இந்த வாய்ப்பை கண்டு, பல நடிகைகள் அப்போதைக்கு செம்ம காண்டாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய மாஸ்டர் படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது. படத்தில் சில போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் மட்டும் முடிக்கப்படாமல் இருந்த நிலையில், அந்த பணிகளும் கடந்த ஓரிரு வாரமாக முடிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படத்தின் ட்ரைலர் இன்னும் சில தினங்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படம் வெளியாக தாமதம் ஆனாலும் பரவாயில்லை ட்ரைலரையாவது இப்போது வெளியிடுங்கள் என தளபதியின் ரசிகர்களும், படக்குழுவிற்கு அன்பு கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். 

இது ஒருபுறம் இருக்க, 'மாஸ்டர்' பட நாயகி மாளவிகா மோகன், அடிக்கடி... தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவதோடு, எதாவது கஷ்டம் என்றாலும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில்... தன்னுடைய சகோதரர் லண்டனில் படித்து கொண்டு இருப்பதாகவும் ஊரடங்கு காரணமாக அவர் தனியாக தங்கி இருப்பதாகவும் அவரது அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் கூட கிடைக்கவில்லை என்றும்  வருத்தப்பட்டு ட்விட் போட்டார்.

ஆனால் தற்போது சர்வதேச விமானங்கள் இயங்கத் தொடங்கியுள்ளதால் தனது சகோதரர் இந்தியாவுக்கு வந்து விட்டதாகவும்,  வெளிநாட்டிலிருந்து வரும் இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற அரசின் அறிவுரையின்படி தனது சகோதரர் ஓட்டல் ஒன்றில் தற்போது 14 நாட்களாக தங்கி தனிமைப்படுத்தி இருப்பதாகவும் விரைவில் அவர் வீடு திரும்ப உள்ளதாகவும் இந்த தகவல் தனக்கு மன நிம்மதியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 
 

click me!