
தயாரிப்பாளர் மதன் பணமோசடியில் ஈடுப்பட்டதன் காரணமாக தலைமறைவானது அனைவரும் அறிந்ததே.
இவரை போலீசார் பல மாதங்களாக வலைவீசி தேடிவந்தனர், சமீபத்தில் தான் திருச்சியில் போலிஸார் அவரை கைது செய்தனர்.
இதற்கு முதலில் மதனுக்கு உதவிசெய்ய மறுத்து பின் உதவியவர் வர்ஷா, அதனாலேயோ என்னவோ இவரை போலீசார் கைது செய்யவில்லை.
தற்போது மதனுக்கு பல விதத்தில் உதவியவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு உதவிய வர்ஷா திருப்பூரில் ஒரு ரெடிமேட் துணிக்கடை வைத்திருக்கிறார், இவரும் மதனுக்கு உதவியுள்ளார் என்பது மதனுடன் இவரும் சேர்ந்து பிடிபட்டத்துலேயே தெரிந்திருக்கும்.
மதனுக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ளனர். மேலும் கீதாஞ்சலி என்ற காதலியும் உள்ளார். இவர் தான் மதன் வட இந்தியாவில் தலை மறைவாக இருந்த போது உதவியவர், இப்போது மதனுடன் மாட்டிக்கொண்ட வர்ஷா அவருடைய சிநேகிதி என்று கூறப்படுகின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.