கைதேர்ந்த கேடி அம்பலமாகிறாள்! அன்றே வெளுத்து விட்டிருந்தால் இவ்வளவு தூரம் வந்திருக்காது! தாமரையின் பகீர் பதிவு

By manimegalai aFirst Published Dec 22, 2022, 6:43 PM IST
Highlights

சின்னத்திரையில் பணியாற்றியுள்ள விஜி பழனிச்சாமி குறித்து, பல்வேறு பகீர் தகவல்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கவிஞர் தாமரை. 
 

தமிழ் சினிமாவில் தன்னுடைய இதமான பாடல் வரிகளால், ரசிகர்கள் மனதை கவர்ந்த பிரபல பாடலாசிரியை தாமரை, தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி கோவை மாவட்டத்தை சேர்ந்த, சிவா என்கிற ரத்னசீலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குடும்ப பிரச்சனை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில்,  இதற்கு காரணம் இவருடைய மனைவி விஜி பழனிச்சாமி என சில ஆடியோ ஆதாரங்களின் மூலம், தற்கொலை செய்து கொண்ட சிவாவின் பெற்றோர், புகார் கொடுத்துள்ளனர்.

எனவே காவல்துறையினர் இந்த வழக்கை, மீண்டும் விசாரிக்க துவங்கியுள்ளனர். ஏற்கனவே திருமணம் ஆன விஜி பழனிச்சாமி, சின்னத்திரையில் பணியாற்றி உள்ளவர். முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் பிரிந்து வாழ்ந்து வந்த இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் பிரபலமான, சிவாவை திருமணம் செய்து கொண்டு அவருக்கு மனரீதியாக பல பிரச்சினைகளை கொடுத்ததாகவும், இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிவாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதற்க்கு ஆதாரமாக சுமார் 43 ஆடியோக்களை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் விஜி பழனிச்சாமி யார் என்பது குறித்து, சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு தன தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது... "

மார்பகம் பாலூட்டுவதற்கு தான்..! செக்ஸ் பொருளாக்கிவிட்டனர்... வேதனையை பகிர்ந்த நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி!

விஜி என்கிற விஜயலட்சுமி என்கிற விஜிஸ் பழனிச்சாமி என்கிற ஒரு 'கைதேர்ந்த' கேடி அம்பலப்படுகிறாள்.

இதுவரை இந்தப் பெண்ணின் பெயரை நான் பொதுவெளியில் உச்சரித்ததில்லை. வேறு ஒரு விதயத்தில் சிக்கி, தானாக மாட்டியதால் இப்போது வெளியிடுகிறேன்.

 

15 ஆண்டுகளாக இவள் ஆடிய ஆட்டத்தில் சிக்குண்டு வாழ்வை, வாழ்வாதாரத்தை, உடல்நலத்தை, மனநலத்தை இழந்தவர்கள் ஏராளமானோர். கடைசியாக, கோவையில், தன்னை விட ஏழு வயது குறைந்த, மணமாகாத ஓர் அப்பாவி இளைஞனை ஏமாற்றித் திருமணம் செய்து, அச்சுறுத்தி, தற்கொலை செய்து கொள்ள வைத்து விட்டாள். அவனது குடும்பம் தத்தளித்துக் கதறுகிறது. இவளுக்கு இன்னும் தன் முதல் கணவன் சண்முகசுந்தரத்தோடு விவாகரத்து ஆகவில்லை. இப்போதும் வெள்ளக்கோவில் போகும்போது அவரோடு குடும்பமாகத்தான் இருக்கிறாள்.

தற்போது சென்னையில் 'கலர்ஸ்' தொலைக்காட்சியில் பணியாற்றும் இவள், 'நான் மீடியா பர்சன், என்னை யாரும் தொட முடியாது' என்று அடிக்கடி மார்தட்டிச் சொல்பவள். 'மீடியா'வில் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்து விடலாமா ??? பொறுத்திருந்து பார்ப்போம் 'மீடியா உலகம்' இவளைக் காப்பாற்றப் போகிறதா இல்லை உரித்துத் தொங்க விடப் போகிறதா என்று ! 

சரி, எதற்காக நான் இவளைப் பற்றிப் பேச வேண்டும் ?. அது ஒன்றுமில்லை, என்னைவிட யார் இவளைப் பற்றி ஆதாரத்தோடு பேச முடியும் ?

விஜய் பட இசை வெளியீட்டு விழாவுக்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்... திட்டமிட்டபடி நடக்குமா வாரிசு ஆடியோ லாஞ்ச்?

ஆம், 2012 இல் தியாகு ஒரு பெண்ணோடு 'ஓடிப் போனார்' என்று அடிக்கடி சொல்வேனே, 'அந்தப் பெண்' சாட்சாத் இந்த விஜயலட்சுமியேதான் !
2011இல் தொடங்கி 2013 வரை இருவரும் அடித்த ஆபாசக்கூத்து குடும்பம், தாய்த்தமிழ்ப்பள்ளி, இயக்கம், பொதுவாழ்க்கை என அனைத்தையும் குலைத்துப் போட்டது. அன்றைக்கே இருவரையும் அம்பலப்படுத்தி வெளுத்து விட்டிருந்தால், இன்றைக்கு இவ்வளவு தூரம் வந்திருக்காது. 

எப்படியோ பலநாள் திருடி இன்று அகப்பட்டாள். பத்தாம் வகுப்பைத் தாண்டாத இவள் பத்தாண்டுகளில் இவ்வளவு உயரத்தைத் தொட்ட கதையைப் பார்க்கலாமா ??
எல்லா அயோக்கியத்தனங்களிலும் எச்சரிக்கையாக இருக்கும் தியாகு, இவள் விதயத்தில் மட்டும் காப்புகளை மறந்து மாட்டி வீழ்ந்த கதையையும் சேர்த்துக் கொள்வோமா ?? 

என்னுடைய வேதனை என்னவென்றால், பாடல்களில்கூட அநாகரீகத்தை அனுமதிக்காத நான் இந்த 'ஆபாசக்கூத்தை' என் மைநா (பேனா)வால் எழுத வேண்டி நேர்கிறதே ! 

Varisu Story: 'வாரிசு' படத்தின் கதை இதுவா? வளர்ப்பு பிள்ளையாக மாறிய தளபதி விஜய்..!

இனி எவரும் இதுபோன்ற மோசடிகளில் சிக்கக் கூடாது என்பதற்காக தியாகு, விஜயலட்சுமி விவகாரம் வெளிப்படையாகப் பேசப்பட வேண்டும்.

நாளைய ஜூனியர் விகடன் இதழை அவசியம் எல்லோரும் வாங்கிப் படியுங்கள். பிறகு பேசுவோம். என தெரிவித்துள்ளார்.

click me!