
கடந்த வாரம் பிப்ரவரி 19 ஆம் தேதி, சென்னை பூந்தமல்லியில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில், இரவு ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது... கிரேன் சரிந்து விழுந்ததில், மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து லைக்கா நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை 'இந்தியன் 2 ' படத்தின் இயக்குனர், ஷங்கர் சென்னை வேப்பேரியில் உள்ள குற்ற பிரிவு போலீசார் நடத்திய 3 மணிநேர விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இந்நிலையில் லைக்கா நிறுவன தயாரிப்பு மேலாளர் சுந்தர்ராஜன், சென்னை உயர்நீதி மன்றத்தில், முன் ஜாமீன் கூறி மனு தாக்கல் செய்தார்.
இந்த முன்ஜாமின் மனு மீதான விசாரணையை அதிரடியாக மார்ச் 2-ஆம் தேதி உயர்நீதி மன்றம் ஒதுக்கி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.