ஓடி வந்த வேகத்தில் சாண்டியை மோதி தள்ளிய லாஸ்லியா! அய்யோ பாவம்... சுருண்டு விழுந்த சம்பம்!

Published : Aug 28, 2019, 12:53 PM ISTUpdated : Aug 28, 2019, 01:00 PM IST
ஓடி வந்த வேகத்தில் சாண்டியை மோதி தள்ளிய லாஸ்லியா! அய்யோ பாவம்...  சுருண்டு விழுந்த சம்பம்!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு கிராமத்து கலையை கற்றுக்கொடுக்கும் நோக்கமாக, நேற்றைய தினம் பொம்மலாட்டம் பற்றி கற்று கொடுக்கப்பட்டது. பின் ஹவுஸ் மேட்சும் தாங்கள் கற்று கொண்ட பொம்மலாட்டத்தை செய்து காட்டி பாராட்டுகளை பெற்றனர்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு கிராமத்து கலையை கற்றுக்கொடுக்கும் நோக்கமாக, நேற்றைய தினம் பொம்மலாட்டம் பற்றி கற்று கொடுக்கப்பட்டது. பின் ஹவுஸ் மேட்சும் தாங்கள் கற்று கொண்ட பொம்மலாட்டத்தை செய்து காட்டி பாராட்டுகளை பெற்றனர்.

இதை தொடர்ந்து இன்று, கிராமிய கலைகளில் ஒன்றான கூத்து பற்றி சொல்லிக்கொடுக்கப்படுவது இன்றைய ப்ரோமோ மூலம் தெரிகிறது.

இரண்டு கிராமமாக தற்போது பிக்பாஸ் வீடு பிரிந்துள்ளதால், இரு அணியினரும் போட்டி போட்டு கொண்டு தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துகிறார்கள்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், சேரன் கோமாளி வேடம் போட்டு கொண்டு வந்தனம்...  வந்தனம்... என கூறி, பாடல் பாடுகிறார். இதை தொடர்ந்து. வனிதா எம தர்மன் வேடம் போட்டு கொண்டு, எங்கே சித்திரகுப்தன் என கேட்க, பெண் வேடம் போட்டுள்ள சாண்டியை ஓடி வந்து இடித்து தள்ளுகிறார் லாஸ்லியா. சாண்டி... சுருண்டு கீழே விழும் காட்சி இந்த ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதில் ஏதாவது சாண்டிக்கு அடி பட்டதா என இன்றைய தினம் தான் தெரியவரும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்