ரொம்ப தப்பு கவின்... தன் மீதே பழி போட்டுக்கொள்ளும் லாஸ்லியா!

By manimegalai aFirst Published Jul 19, 2019, 2:20 PM IST
Highlights

வனிதா வெளியே போகும் முன், சத்தத்தில் ரணகளமான பிக்பாஸ் வீடு, இப்போது அமைதியாக சென்றாலும், காதல் சண்டைகள் மிகவும் அமைதியாக நடந்து வருகிறது. 
 

வனிதா வெளியே போகும் முன், சத்தத்தில் ரணகளமான பிக்பாஸ் வீடு, இப்போது அமைதியாக சென்றாலும், காதல் சண்டைகள் மிகவும் அமைதியாக நடந்து வருகிறது. 

முக்கோண காதல் கதையான கவினின் காதலுக்கு சாக்ஷி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவருமே ட்விஸ்ட் வைத்துள்ளனர். இதனால் மாறி மாறி இருவரையும் சமாதானம் செய்து வருகிறார் கவின். 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், இன்றைய புரமோவில் கவினிடம் லாஸ்லியா இதுகுறித்து வருத்தமாக கூறிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  இந்த ப்ரோமோவில்... 'நீ பண்ணியது தப்பு கவின், பெரிய தப்பு. ஒருத்தரோட ஃபீலிங்ஸோட விளையாடறடு பெரிய தப்பு.  எல்லாமே என்னாலதான்னு தோணுது. பைத்தியக்காரி மாதிரி நான் பிஹேவ் பண்ணியிருக்கேன்' என்று கூறிவிட்டு, எல்லாமே முடிஞ்சிடுச்சி என கோபமாக எழுந்து செல்கிறார் லாஸ்லியா.

ஏற்கனவே வெளியான முதல் புரோமோவில், சாக்ஷியிடம் மன்னிப்பு கேட்டு  கண்கலங்கும் காட்சி வெளியானது. சாக்ஷி அவருடைய மன்னிப்பை ஏற்க மறுத்திருந்தார். தற்போது கவினை நிராகரிப்பது தன் மீது தவறு உள்ளது என லாஸ்லியாவும் வருத்தத்துடன் பேசியுள்ளார். இனி கவினின் நிலை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


 

click me!