பிரபல இசைக்குழு உரிமையாளர் தற்கொலை..!

Published : Dec 25, 2019, 10:11 AM IST
பிரபல இசைக்குழு உரிமையாளர் தற்கொலை..!

சுருக்கம்

லக்ஷ்மன் இசைக்குழு உரிமையாளர் ராமன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

லக்ஷ்மன் சுருதி, தமிழகத்தின் பிரபலமான இசைக்குழுக்களுள் ஒன்றாகும். பல்வேறு இடங்களில் இசைக்கச்சேரிகள் நடத்தி வருகின்றனர். இதன் நிறுவனர் ராமன். சென்னை அசோக் நகரில் வசித்து வருகிறார். சென்னை காமராஜ் அரங்கத்தில் நேற்று லக்ஷ்மன் சுருதி குழுவினரின் இசை கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அதில் ராமன் கலந்து கொண்டு கச்சேரியை நடத்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென பாதியிலே கச்சேரியில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். பின் வீட்டில் இருக்கும் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் ராமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லக்ஷ்மன் இசைக்குழு உரிமையாளர் ராமனின் தற்கொலை அவரது குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடிபொலியாக இருந்ததா குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்...? முழு விமர்சனம் இதோ
துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது