
’பேட்ட’ படத்தின் 50 வது நாள் வெற்றிவிழாவில் ஒரு குழந்தைக்கு பாகிஸ்தான் பிடியில் சிக்கி இன்று விடுதலையாக உள்ள இந்திய ராணுவ விமானி அபிநந்தனின் பெயரைச் சூட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த்.
அஜீத்தின் ‘விஸ்வாசம்’ பட வசூலை விட சற்றே குறைவான வசூலை ‘பேட்ட’ எட்டியிருந்தாலும் ரஜினியைப் பொறுத்தவரை இது ஒரு சூப்பர் ஹிட் படம் தான். அந்த உற்சாகத்தைக் கொண்டாடும்படி தமிழகம் முழுக்க ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்தக் கொண்டாட்டங்களுக்குப் பிள்ளையார் சுழியாக நேற்று சென்னையில் நடந்த ‘பேட்ட’ 50 வது நிகழ்ச்சி ஒன்றில் சூப்பர் ஸ்டாரின் மனைவி லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டார். விழாவின் முக்கிய நிகழ்வாக 3 மூன்று குழந்தைகளுக்கு இறந்த இராணு வீரர்கள் 2 பேர் பெயரையும் குழந்தைக்கு கட்டுப்பட்டில் இருக்கும், இன்று விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும், விமானிஅபிநந்தன் பெயரை லதா ரஜினிகாந்த் சூட்டினார். அபிநந்தன் பெயரை சூட்டியபோது விழாவில் கலந்துகொண்ட அனைவரும் நெகிழ்ச்சியோடு கரகோஷம் எழுப்பினார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.