அனைவர் மத்தியிலும் குஷ்புவிடம் தவறாக நடந்துகொண்ட நபர்! பளார் விட்டதால் பரபரப்பு! (வீடியோ காட்சி)

Published : Apr 11, 2019, 12:58 PM ISTUpdated : Apr 11, 2019, 01:09 PM IST
அனைவர் மத்தியிலும் குஷ்புவிடம் தவறாக நடந்துகொண்ட நபர்! பளார் விட்டதால் பரபரப்பு! (வீடியோ காட்சி)

சுருக்கம்

நடிகை குஷ்பு, சீரியல், படங்கள் தயாரிப்பு, சின்னத்திரை நிகழ்ச்சி என பிஸியாகவே இருந்தாலும்... அரசியலிலும் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.  

நடிகை குஷ்பு, சீரியல், படங்கள் தயாரிப்பு, சின்னத்திரை நிகழ்ச்சி என பிஸியாகவே இருந்தாலும்... அரசியலிலும் தன்னுடைய முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கும் அவர், இது தேர்தல் நேரம் என்பதால், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

குஷ்பு நடிகை என்பதால், இவர் கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டங்களில் வழக்கத்தை விட கூட்டம் நிரம்பி வழிகிறது. அந்த வகையில் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில், குஷ்பு முன்னே செல்ல அவரை பலர் சூழ்ந்து கொண்டனர். இதனால் கூட்ட நெரிசலில் சிக்கினார். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு நபர் குஷ்புவை தொடக்கூடாது இடத்தில் தொட்டு தவறாக நடந்து கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குஷ்பு, அனைவர் மத்தியிலும் அவரை பளார் பளார் என அறை விட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலர் குஷ்புவின் துணிச்சலுக்கு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!