
பிரபல மடிகர் திடீர் மரணம்.... துயரத்தில் திரைத்துறையினர்..!
பிரபல வில்லன் நடிகரான கொல்லம் அஜித் உடல் நலக்குறைவு காரணமாக இன்று விடியற்காலை 3 மணி அளவில் உயிரிழந்தார்.
கிட்டத்தட்ட 500 படங்களுக்கும் மேலாக, நடித்துள்ள இவர் கடந்த சில நாட்களாக வயிறு வழியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.பின்னர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று உயிரிழந்தார்.
மலையாளத்தில்,மோகன்லால்,மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் வில்லனாக நடித்தவர் கொல்லம் அஜித்.
1983 ஆம் ஆண்டு இயக்குனர் பத்மராஜனின்" பரன்னு பரன்னு பரன்னு" என்ற படத்தி மூலம் அறிமுகமானவர்.
பின்னர் இவருடைய நடிப்பின் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழி படங்களில் நடித்தவர் தான் கொல்லம் அஜித
முதன் முதலில்,துணை இயக்குனராக தான் திரை உலகில் காலடி எடுத்து வைத்தார் கொல்லம் அஜித்.
இந்நிலையில்,திடீரென கொல்லம் அஜித் மரணம் அடைந்ததால்,திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் துயரத்தை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.