பாவனா பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகை... பழி உணர்ச்சி காரணமா...?

 
Published : Jul 03, 2017, 05:49 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
பாவனா பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகை... பழி உணர்ச்சி காரணமா...?

சுருக்கம்

Kavya Madhavans involvement in Bhavana Case

நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன், அவருடைய கார் ஓட்டுனரால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார் இந்த சம்பவம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட அனைத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்களையும் அதிர்ச்சியாக்கியது.

இதை தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பாவனாவின் முன்னாள் கார் ஓட்டுநர் பல்சர் சுனிலிடம் விசாரணை செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பலரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடிகர் திலீப்பிடம் போலீசார் விசாரணை நடைதியதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவருடைய இரண்டாவது மனைவி காவியா மாதவனுக்கு சொந்தமான கடையை இன்று போலீசார் சோதனை செய்ததாகவும் பின் ஒரு மணி நேரம் காவியா மாதவனிடம் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை பாவனா ஒரு காலத்தில் காவியா மாதவனின் நெருங்கிய தோழியாக இருந்தவர், இவரால் தான் திலீப் மற்றும் காவியாவின் நிஜ முகம் வெட்டவெளிச்சமானது. ஏற்கனவே பாவனாவால் காவிய பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளாகியுள்ளார் என்பதால் பழி வாங்குவதற்காக இப்படி ஒரு செயலை செய்தாரா என்கிற நோக்கத்தில் போலீசார் விசாரித்ததாக தெரிகிறது. 

இந்த வழக்கு குறித்து போலீசார் முழுமையான தகவலை வெளியிடும் போதுதான் உண்மையான தகவல் வெளியாகும் என்று மலையாள திரையுலகத்தில் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!