நனைத்த உடையில் லிப்ட்டில் வந்த மாணவி! கல்லூரி ஊழியர் செய்த கேவலமான செயல்! பொங்கி எழுந்த நடிகை கஸ்தூரி!

By manimegalai aFirst Published Nov 23, 2018, 11:54 AM IST
Highlights

நடிகை கஸ்தூரி எப்போதும் பாரபட்சம் இன்றி, தன்னுடைய மனதில் தோன்றும் கருத்துக்களை கூறி அரசியல் வாதிகள் முதல் சமூக அக்கறை கொண்ட விஷயம் வரை விமர்சித்து வருகிறார். 

நடிகை கஸ்தூரி எப்போதும் பாரபட்சம் இன்றி, தன்னுடைய மனதில் தோன்றும் கருத்துக்களை கூறி அரசியல் வாதிகள் முதல் சமூக அக்கறை கொண்ட விஷயம் வரை விமர்சித்து வருகிறார். 

இந்நிலையில் இவர் தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ள விஷயம், இப்படியும் நடக்குமா? என பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது என்னவென்றால்... பிரபல தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், மழையில் நனைத்த உடையுடன் லிப்டில் சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியுடன் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் ஒருவரும் இருந்துள்ளார். 

திடீர் என அந்த மாணவி கண் முன்பே அந்த ஊழியர், உடைகளை அவிழ்த்து சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, இந்த பிரச்னையை உரிய கல்லூரியின் ஹாஸ்டல் வார்டன் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அந்த வார்டன் இந்த பிரச்னையை உதாசீன படுத்தியதோடு. மாணவிகள் இது போன்ற ஆடை அணிவதால் தான் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறுவதாக கூறியுள்ளார்.

 

WTF. Man masturbated at student in elevator. When she complained , the hostel warden insinuated that she deserved what she got because of the way she was dressed!!!??? https://t.co/0eMiEMCUw7

— Kasturi Shankar (@KasthuriShankar)

 

இதனால் அந்த கல்லூரி மாணவிகள் ஒன்று கூடி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை தான் கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறி கோவத்தில் கொந்தளித்துள்ளார். 

pic.twitter.com/FlD38CVwSH

— வன யட்சி (@SolitaryReaper_)

 

click me!