3 வருடங்களுக்கு பிறகு கர்ப்பம்: ஜோசியரால் அம்மாவிற்காக கர்ப்பத்தை மறைக்கும் ரோகிணி – கார்த்திகை தீபம்!

Published : Jun 14, 2025, 05:00 AM IST
karthigai deepam

சுருக்கம்

Karthigai Deepam Rohini Pregnant after 3 years : கார்த்திகை தீபம் சீரியலில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரோகினி இப்போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதைக் கேட்டு மயில்வாகனம் ரொம்பவே மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Karthigai Deepam Rohini Pregnant after 3 years : ஜீ5 தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பது கார்த்திகை தீபம் சீரியல் தான். முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது 2ஆவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ரேவதி மற்றும் ராஜா (கார்த்திக்) இருவருக்கும் திருமணம் நடந்த பிறகு வீட்டிலுள்ள எல்லா பொறுப்புகளும் ராஜாவிற்கு வருகிறது. ரோகினிக்கு இரத்தம் ஏற்பாடு செய்வது, ஸ்வாதியை காப்பாற்றுவது, சாமுண்டீஸ்வரிக்கு பக்க பலமாக இருப்பது வரை எல்லாமே ராஜா தான்.

ஆரம்பத்தில் ராஜாவை வெறுத்த ரேவதி இப்போது அவரை காதலிக்க ஆரம்பித்துவிட்டார. உண்மையில் ராஜாதான் பாட்டியின் பேரனா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார். அது மட்டுமின்றி இந்த வாரத்திலிருந்து தீபாவின் அம்மா மற்றும் அண்ணி கதாபாத்திரங்கள் சீரியலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் என்ன டுவிஸ்ட் என்றால் ராஜாவின் மாமியார் வீட்டிற்கே வந்து அவர்களிடம் வேலை கேட்பது தான். அதுமட்டுமின்றி செங்கல் சோலையில் அவர்களுக்கு வேலை கொடுப்பதாக சாமூண்டீஸ்வரியும் வாக்குறுதி அளித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க ரொம்ப வருடங்களுக்கு பிறகு சாமூண்டீஸ்வரியின் மூத்த மகள் ரோகிணி இப்போது கர்ப்பமாக இருக்கிறார். அப்பாவான சந்தோஷத்தில் மயில்வாகனம் இருக்கிறார்.

தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அம்மாவிடம் சொல்ல ஆசையாக வீட்டிற்கு வரும் ரோகினி அம்மா பேசியதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். தனது வரட்டு கௌரவம் முக்கியமா, மகளின் சந்தோஷம் முக்கியமா என்று கேட்டால் எல்லோருமே மகளின் சந்தோஷம் தான் முக்கியம் என்பார்கள். ஆனால், சாமுண்டீஸ்வரி தனது மாமியார் குடும்பத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இத்தனை ஆண்டுகளாக அவர்களுடன் பேசவில்லை. இனிமேலும் பேச போவதில்லை என்று பிடிவாதமாக இருக்கிறார். நாளுக்கு நாள் கார்த்திகை தீபம் சுவாரஸ்யமான காட்சிகளுடன் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அம்மா இப்படி சொல்லியதால் கர்ப்பமாக இருப்பதை ரோகிணியும், மயில் வாகனமும் மறைக்கின்றனர். இதைத் தொடர்ந்து ராஜா இதுவரையில் சாமுண்டீஸ்வரி, மயில் வாகனம், ரோகிணி, ரேவதி, சுவாதி என்று எலோரையும் காப்பாற்றியதைத் தொடர்ந்து அடுத்து துர்காவையும் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. எப்படி என்றால் துர்காவை பெண் கேட்டு ஒரு குடும்பத்தினர் வருகின்றனர். ஆனால், அவர்கள் சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட குடும்பம்.

சாமுண்டீஸ்வரியோ இந்த சம்பந்தத்திற்கு ஓகே சொல்ல, துர்கா தனக்கு கல்யாணம் வேண்டாம் என்று மறுக்கிறார். அவர் தன்னையே அறியாமல் நவீனை காதலிக்க தொடங்கியதால் இந்த திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார். ஆனால், சந்திரலேகாவை சாமுண்டீஸ்வரி ஏற்றிவிட அவரும் இந்த திருமணத்திற்கு ஓகே சொல்கிறார். இப்படி டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வச்சு கார்த்திகை தீபம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எப்போதுதான் சாமுண்டீஸ்வரி அவரது மாமியார் குடும்பத்தோடு ஒன்று சேர்வார் என்ற எதிர்பார்ப்பும், ரேவதிக்கு எப்போது தனது கணவர் ராஜாவைப் பற்றி தெரியவரும் என்ற எதிர்பார்ப்பும் இப்போது ஏற்பட்டுள்ளது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

கிரிஷை வீட்டை விட்டு துரத்த விஜயா போடும் புது பிளான்... ரோகிணிக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்