கார்த்திக் நரேனின் மூன்றாவது படத்தின் பெயர் வெளியானது...!

First Published Feb 15, 2018, 7:51 PM IST
Highlights
karthick naren third movie name announced


'துருவங்கள் பதினாறு ' இயக்குநர் கார்த்திக் நரேனின்  புதிய படத்தின் பெயர் இன்று 5 மணிக்கு வெளியிடப்பட்டது.

சென்ற ஆண்டில் 100 நாள் ஓடி  மாபெரும் வெற்றிப் படம் 'துருவங்கள் பதினாறு'. இப்படம்  விமர்சன ரீதியிலும்  வசூலிலும் பேசப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது.

இதனால் இப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேனின்  அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு கூடியது. அவர் தனது அடுத்த படமாக 'நரகாசுரனை' இயக்கி உள்ளார் . அரவிந்த்சாமி , ஸ்ரேயா , சந்தீப் கிருஷ்ணா , ஆத்மிகா நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் தன் மூன்றாவது படத்தின் அறிவிப்பைத் தனது ட்விட்டரில் கார்த்திக் நரேன் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியிட்டார். படத்தின் பெயர் 'நாடக மேடை ' .இப்படத்தை இயக்கி தன் 'நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட் ' பட நிறுவனம் சார்பில்  தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவு - சுஜித் சரங், இசை- ரோன் ஈத்தன் யோகன் , எடிட்டிங் - ஸ்ரீஜித் சரங் , கலை - சிவசங்கர், தயாரிப்பு நிர்வாகம்  - மணிகண்டன் என்று தன் பரிவாரங்களுடன் களம் இறங்கும் கார்த்திக் நரேன் ,நடிப்பவர்கள் யார் யார் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளார். அது யாரும் எதிர்பாராத யூகிக்க முடியாத நட்த்திரக் கூட்டணியாக இருக்குமாம்.

'Naadaga Medai' - A light hearted film about the modern day society through the eyes of youngsters with varying perceptions about life. On floors from mid 2018. Cast will be revealed soon :) pic.twitter.com/ZJLpzCT1eO

— Karthick Naren (@karthicknaren_M)

click me!