தனுஷ் D43 படத்தில் இருந்து விலகினாரா கார்த்திக் நரேன்..? கசிந்தது உண்மை தகவல்!

By manimegalai aFirst Published Jul 10, 2021, 3:34 PM IST
Highlights

நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வரும் 43 ஆவது படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் திடீர் என வெளியேறியதாக ஒரு தகவல் வெளியானதை தொடர்ந்து, தற்போது இது குறித்த உண்மை என்ன என்பது வெளியாகியுள்ளது.
 

நடிகர் தனுஷ், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக நடித்து வரும் 43 ஆவது படத்தில் இருந்து இயக்குனர் கார்த்திக் திடீர் என வெளியேறியதாக ஒரு தகவல் வெளியானதை தொடர்ந்து, தற்போது இது குறித்த உண்மை என்ன என்பது வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் தன்னுடைய 43 ஆவது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வருகிறார். தனுஷ் ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்வதற்கு முன்பே இந்த படத்தின், முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்தியா வந்த ஓரிரு நாட்களிலேயே நடிக்க துவங்கி விட்டார்.

சமீபத்தில் கூட தனுஷின்  43 ஆவது படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘D43' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கும் என்றும் இந்த படப்பிடிப்பு இறுதி கட்ட படப்பிடிப்பு ஆக இருக்கும் என்றும் தெரிவித்தது. அதன் படி தற்போது மீண்டும் தனுஷ் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில் தான் ஹைதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மாளவிகா மோகன் அங்கு சென்றார். இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன்.... திடீர் என தனுஷ் படத்தில் இருந்து விலகியதாகவும், எனவே இந்த படத்தை தனுஷ் திருடா திருடி பட இயக்குனர் சுப்பிரமணியம் சிவாவுடன் சேர்ந்து இயக்க உள்ளதாக  சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் பரவ துவங்கியது.

மேலும் இதுகுறித்து தற்போது கசிந்துள்ள தகவலில், இயக்குனர் கார்த்திக் நரேஷ் இந்த படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும், தனுஷ் - கார்த்திக் நரேன் இருவரும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

click me!