
தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக காலடி எடுத்து வைத்து, பின் பருத்தி வீரன் படம் மூலம் நடிகராக மாறி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி.
கார்த்தி ஒரு நடிகர் என்பதையும் கடந்து நல்ல மனிதர். நடிகர் சங்க பொருளாளராகவும் உள்ளார். அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை சந்தித்து ரசிகர்களுடன் நட்பு ரீதியாகப் பேசியும் வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகர் ஒருவர் விபத்தில் அடிபட்டு உயிரிழந்தார். அவருக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆகிறது என்பதுதான் கொடுமை. இந்தச் செய்தியை கேள்விப்பட்ட கார்த்தி உடனடியாக அந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஒரு கட்டத்தில் அழுகையை அடக்க முடியாமல் கார்த்தியும் கதறி அழுதார். தற்போது அந்தப் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.