இயக்குனருடன் காதல்... பெற்றோர் எதிர்ப்பைமீறி திடீர் திருமணம்... பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்த நடிகை விஜயலக்ஷ்மி!

Published : Jan 11, 2020, 11:44 AM ISTUpdated : Jan 11, 2020, 11:46 AM IST
இயக்குனருடன் காதல்... பெற்றோர் எதிர்ப்பைமீறி திடீர் திருமணம்... பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்த நடிகை விஜயலக்ஷ்மி!

சுருக்கம்

கன்னட நடிகை விஜயலக்ஷ்மி என்பவர் தான் காதலித்த இயக்குனரை ரகசிய திருமணம் செய்து கொண்டு, போலீசிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ள சம்பவம், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கன்னட நடிகை விஜயலக்ஷ்மி என்பவர் தான் காதலித்த இயக்குனரை ரகசிய திருமணம் செய்து கொண்டு, போலீசிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ள சம்பவம், திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட திரையுலகில், துணை நடிகையாக இருப்பவர் விஜயலக்ஷ்மி. பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். 

தற்போது 'துங்கபத்ரா' என்கிற படத்தை இயக்கி வரும், ஆஞ்சிநேயா என்பவரை விஜயலக்ஷ்மி காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதல் விவகாரம், நடிகையின் வீட்டிற்கு தெரியவர, அவருடைய அம்மா மற்றும் வளர்ப்பு தந்தை ஆகியோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் ஆஞ்சிநேயனை திருமணம் செய்து கொள்ள கூட என்பதற்காக, அவசர அவசரமாக திருமணத்திற்கு மாப்பிளை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே நடிகை விஜயலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறி, பெற்றோரை மீறி இயக்குனர் ஆஞ்சிநேயனை ரகசிய திருமணம் செய்து கொண்டார். 

திருமணம் முடித்த கையோடு, போலீஸ் பாதுகாப்பு கேட்டு இந்த ஜோடி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த சம்பவம் கன்னட திரையுலகில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?