நீர் வீழ்ச்சிக்குள் தவறி விழுந்து பிரபல இயக்குனர் மரணம்...! சோகத்தில் திரையுலகினர்..! 

 
Published : May 31, 2018, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
நீர் வீழ்ச்சிக்குள் தவறி விழுந்து பிரபல இயக்குனர் மரணம்...! சோகத்தில் திரையுலகினர்..! 

சுருக்கம்

kannada director death in water fall

கன்னட சினிமாவில் 'கனசு கண்ணு தேரேடாடா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் ஷெட்டி கடீல். தற்போது தன்னுடைய அடுத்த படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 8:30 மணியளவில் எராமி நீர் வீழ்ச்சி அருகே தன்னுடைய நான்கு நண்பர்களுடன் சந்தோஷ் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.   

அந்த பகுதியில் தற்போது மழை பொழிவு உள்ளதால். சேறு மற்றும் வழுக்கு பாறைகள் அதிகமாக இருந்துள்ளது. 

இவர் போட்டோ ஷூட் நடத்தும் போது, நீர் வீழ்ச்சியின் மேல உள்ள பாறையில் கால் வைத்துள்ளார். அப்போது திடீர் என எதிர் பாராத விதமாக கால் வழுக்கி நீர் வீழ்ச்சிக்குள் விழுந்தார்.  உடனே அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். 

சந்தோஷ் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவருடைய மரணம் குறித்து அறிந்த கன்னட திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்