இந்தியை நடிகையை அஜித் கட்டிப்பிடித்து, காதல் கொண்டு.. 20 ஆண்டுக்கு முந்தைய புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்

By Thiraviaraj RMFirst Published May 5, 2020, 4:49 PM IST
Highlights

எனக்கு உன்னை பிடிக்கிறது. ஆனாலும் நீ என் மீது காட்டும் கரிசணம் காதல் இல்லை. அது வெறும் கரிசணம் தான் 

ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், வைரமுத்து பாடல் வரிகளில், சுஜாதாவின் எழுத்தில் இப்படம் வெளியானது. 1811ம் ஆண்டு ஜேன் ஆஸ்டென் எழுதிய சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி நாவலை அடிப்படையாக உருவாக்கப்பட்டது இந்த திரைப்படம். அந்தப்படத்தில் வரும்  ’என்ன சொல்லப் போகிறாய்’பாடல் இன்னும் பலருக்கு ஃபேவரைட். சங்கர் மகாதேவனுக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதினை பெற்றுத் தந்தது அந்த பாடல்.

தமிழ் சினிமாவில் காதலை இவ்வளவு அழகாகவும், இவ்வளவு மென்மையாகவும்  தெரிவிக்கும் கதைகளுக்கும் வாய்ப்புகள் உண்டா என எண்ண வைத்த படம் அது. பிடிக்கும், ஆனால் சேர்ந்து வாழ வழியில்லை. பிடிக்கும், ஆனால் என் கனவுகளை நோக்கி நான் நகர்ந்து சென்றிருக்கின்றேன். எனக்கு உன்னை பிடிக்கிறது. ஆனாலும் நீ என் மீது காட்டும் கரிசணம் காதல் இல்லை. அது வெறும் கரிசணம் தான் என்று ஒரு முக்கோண காதலும், புரிதலோடு பயணிக்கும் காதல் மறுபுறமும் மக்கள் மனதில் நின்று கொண்டது. இப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது என்று சொன்னால் நம்பத்தான் முடியுமா.? ரசிகர்கள் கொண்டாடும் கண்டுக்கொண்டேன் கண்டுகொண்டேன்.

 இந்நிலையில் அந்தத் திடைப்படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு 20 ஆண்டுகளுக்கு பிறகு மம்மூட்டி, ஐஸ்வர்யா ராய், அஜித், தபு, அப்பாஸ் ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அசத்தியுள்ளார். 

20 ஆண்டுகள் ஆனாலும், நினைவில் நீங்கா தருணங்கள்! pic.twitter.com/VZ6Urh6Sq9

— Kalaippuli S Thanu (@theVcreations)

 


 

click me!