தலையில் கூடையை சுமந்து சென்று அஜ்மீர் தர்காவில் குடும்பத்தோடு சிறப்பு தொழுகை நடத்திய காஜல்..! ஏன் தெரியுமா?

Published : Nov 13, 2019, 12:08 PM IST
தலையில் கூடையை சுமந்து சென்று அஜ்மீர் தர்காவில் குடும்பத்தோடு சிறப்பு தொழுகை நடத்திய காஜல்..! ஏன் தெரியுமா?

சுருக்கம்

தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வால் தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.

தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வால் தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.

இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூட, நல்ல மாப்பிளை கிடைத்தால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவேன் என தெரிவித்திருந்தார். மேலும் இவருடைய குடும்பத்தினரும் காஜலுக்கு ஏற்ற போல் ஒரு மாப்பிளையை தீவிரமாக தேடி வருகிறார்கள். இதனால் கண்டிப்பாக அடுத்த வருடத்தில் காஜலை மாலையும் கழுத்துமாக ரசிகர்கள் பார்க்கலாம் என்பது உறுதி.

இந்நிலையில் காஜல் அகர்வால் அவருடைய அம்மா, மற்றும் குடும்பத்தினருடன் சென்று ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவில் தலையில் பூ கூடையை சுமந்து சென்று சிறப்பு தொழுகை நடத்தியுள்ளார். 

இந்த தொழுகை, காஜலின் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்கிற வேண்டுதலோடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காஜல் தலையில் பூ கூடையை சுமந்து சென்று, அஜ்மீர் தர்காவில் வழிப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதே போல் காஜலின் ரசிகர்கள் பலர், இவருடைய வேண்டுதல் நிறைவேற தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?