‘பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கத்தான் செய்கிறார்கள்’...’இந்தியன் 2’நாயகி காஜல் அகர்வால் பகீர்...

By Muthurama LingamFirst Published Feb 7, 2019, 4:59 PM IST
Highlights

‘சினிமா நடிகைகள் ‘மி டு’ விவகாரத்தில் பொய் சொல்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் திரைத்துறையில் இருக்கவே செய்கின்றன’ என்று தடாலடியாக உண்மையைப் போட்டு உடைக்கிறார் ‘இந்தியன் 2’ பட நாயகி காஜல் அகர்வால்.


‘சினிமா நடிகைகள் ‘மி டு’ விவகாரத்தில் பொய் சொல்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சம்பவங்கள் திரைத்துறையில் இருக்கவே செய்கின்றன’ என்று தடாலடியாக உண்மையைப் போட்டு உடைக்கிறார் ‘இந்தியன் 2’ பட நாயகி காஜல் அகர்வால்.

’என்னைப்பார்த்தால் சாதுவான நடிகை போல் தோன்றும். ஆனால் கோபம் வந்தால் பத்ரகாளியாக மாறிவிடுவேன் என்பது என்னிடம் பழகும் அனைவருக்கும் தெரியும் என்பதால் இதுவரை என்னிடம் யாரும் தவறாக நடக்க முயற்சிக்கவில்லை’ என்று கூறும் காஜல் மேலும் பேசுகையில்,’‘நான் ஹீரோயினாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. வடநாட்டு பெண்ணாக இருந்தாலும் என்னை தமிழ் பெண்ணாகத் தான் பார்க்கிறார்கள். மார்க்கெட் போய் சும்மா உட்கார்ந்து விடுவோமோ என்று நான் ஒரு நாளும் பயந்ததே இல்லை.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. நான் தைரியமானவள். எனக்கு என்னை காத்துக் கொள்ள தெரியும். எனக்கு கோபம் வந்தால் பத்ரகாளி மாதிரி ஆகிவிடுவேன். ஒரு முறை என் தோழியிடம் தவறாக நடக்க முயன்றவனின் சட்டை காலரை பிடித்து முகம் வீங்கும் அளவுக்கு அவனை அடித்தேன். அப்போதும் கூட என் ஆத்திரம் அடங்கவில்லை.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டதாக சில நடிகைகள் தெரிவித்துள்ளனர். அதில் பொய் இருக்காது. ஆனால் என்னை யாரும் அப்படி அழைக்கவில்லை. அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்’ என்கிறார் காஜல்.

click me!