2 வருடத்தில் 30 கதையை கேட்ட அதிதி பாலன்! அடுத்த படத்தை உறுதிசெய்தார்!

Published : Feb 07, 2019, 03:44 PM IST
2 வருடத்தில் 30 கதையை கேட்ட அதிதி பாலன்!  அடுத்த படத்தை உறுதிசெய்தார்!

சுருக்கம்

கடந்த 2017 ஆம் ஆண்டு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படமான 'அருவி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன்.   

கடந்த 2017 ஆம் ஆண்டு, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படமான 'அருவி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். 

இவர் ஏற்கனவே 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்து விட்டார். 

இதனால் இவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. பல இயக்குனர்கள் இவரை தேடி சென்று கதை கூறிய போதிலும், தன்னுடைய மனதிற்கு பிடித்த கதையில் தான் நடிப்பேன் என உறுதியாக இருந்தார். 

இதனால் 'அருவி' படத்தை தொடர்ந்து எந்த படத்திலும், அதிதி பாலன் கமிட் ஆகவில்லை. இந்நிலையில் 2  வருடம் கழித்து மலையாளத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார்.

"ஜாக் அண்ட் ஜில்" என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்கிறார் அதிதி பாலன்.  மேலும்  இந்த படத்தில், நடிகை மஞ்சு வாரியர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி