ஒடுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வியலை காலா படம் பேசும் – பா.இரஞ்சித்

 
Published : Oct 26, 2017, 09:43 AM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
ஒடுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வியலை காலா படம் பேசும் – பா.இரஞ்சித்

சுருக்கம்

Kaala will speak about the life of oppressed Tamils - P. Irinjith

ஒடுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு காலா கதை அமைக்கப்பட்டுள்ளது என்று இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 மற்றும் காலா படத்தின் படப்பிடிப்புகள் முடிந்ததால் ரஜினிகாந்த் ஓய்வில் இருக்கிறார். துபாயில் நடக்கும் 2.0 இசை வெளியீட்டு விழாவுக்கு குடும்பத்துடன் பறந்துள்ளார்.

இந்த இரு படங்களின் போஸ்ட் ப்ரொடெக்‌ஷன் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகிறது.

காலா படம் அடுத்தாண்டு ஏப்ரலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் வலுவான அரசியல் இடம் பெற்றுள்ளதாக இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஒடுக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு காலா கதை அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

காலா படம் தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது என்பதும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகும் என்பதும் கொசுறு தகவல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!