கட்டி பிடித்து முகம் சுளிக்க வைத்த ஜூலி...

First Published Jul 17, 2017, 4:35 PM IST
Highlights
juleeyana hug for all


பொதுவாகவே கட்டிப்பிடித்து தங்களுடைய அன்பை பரிமாறிக்கொள்வது நடிகர், நடிகைகளின் கலாச்சாரமாகவே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். ஆனால் அப்படி பட்ட பழக்கங்கள் இன்னும் நம் தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை. இதனால் தான் கட்டி பிடித்து பேசும் வெளிநாட்டவர்கள் தமிழ் நாட்டிற்கு வந்தால், நம் கலாச்சாரத்திற்கு மாறி இரு கை கூப்பி வணக்கம் சொல்லுகின்றனர்.

ஆனால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டிற்காக நான் போராடினேன் என்று கூறி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஜூலி அனைவரும் முகம் சுளிக்கும் அளவிற்கு கட்டிப்பிடித்து ஆசைப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே தன்னை கட்டி பிடிக்க ஆளே இல்லை என ஸ்ரீயிடம் கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்திய, ஜூலி நேற்றைய தினம் வெளியேற்றுவதற்காக அறிவிக்கபட்டவுடன் சினேகனை மட்டுமே மூன்று முறை கட்டிப்பிடித்தார். மேலும் ஆரவ், காயத்ரி, சக்தி என ஒருவரை கூட விடமால் கட்டி பிடித்தபடி இருந்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

ஆர்த்தி ஒரு நடிகையாக இருந்தபோதும், பிரியும் போது காயத்ரி மற்றும் ஒரு சிலரை மட்டுமே கட்டி பிடித்து பிரியாவிடை கொடுத்தார்.

 

click me!