மதமாற்ற எச்சைகளும்- சோற்றுக்கு வாலாட்டும் பிச்சைகளும் கோயில்களை கொச்சைப்படுத்துவதா? ஜோதிகாவுக்கு பகிரங்க மடல்!

By Thiraviaraj RMFirst Published Apr 23, 2020, 12:06 PM IST
Highlights

விருது விழாவில் கோவில்கள் பற்றி ஜோதிகா பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இதற்காக ஜோதிகாவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து ஜோதிகாவுக்கு இரா.அழகர் என்பவர் பகிரங்க மடலை எழுதியுள்ளார்.


விருது விழாவில் கோவில்கள் பற்றி ஜோதிகா பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  இதற்காக ஜோதிகாவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து ஜோதிகாவுக்கு இரா.அழகர் என்பவர் பகிரங்க மடலை எழுதியுள்ளார்.அதில், 

திருமதி.ஜோதிகா சூர்யா அவர்களுக்கு..!
தாங்கள் 'விஜய் டிவி'-யில், கடந்த 19-04-2020 அன்று ஒளிபரப்பு செய்யப்பட்ட விருது வழங்கும் விழாவில், தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றியும், அரசு மருத்துவமனை மருத்துவத் தரம் பற்றியும், கல்வியின் தரம் குறைவு என்பது பற்றியும் மிகவும் உருக்கமாக பேசினீர்கள். கோவில்களுக்கு ஏன் செலவு செய்கிறீர்கள்? உண்டியலில் ஏன் பணம் போடுகிறீர்கள்..? அதை மருத்துவத்துக்கும், கல்விக்கும் செலவிடலாமே என ஆதங்கத்தோடு ஆலோசனை கூறி உங்களை ஒரு பகுத்தறிவுவாதியாக (?!) அடையாளப் படுத்திக் கொண்டு பெருமை கொண்டீர்கள்.

நல்லது. நீங்கள் பிறப்பால் ஒரு இஸ்லாமியர். மார்க்க வழிபாடு கொள்பவர். பிறர் மதங்களைப்  பற்றி பேசும் பொழுது, அதன் பெருமைகள் என்ன, தொன்மை வரலாறென்ன என்பதைப் பற்றி அறியாமல் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். எங்களின் சோழப்பேரரசு எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கி, உலகோர் போற்றும் 'இராஜராஜ சோழனின்' தலைமையிலும், அவன் வழி வந்து கீழ்த்திசை நாடுகளை கடல்கடந்து படை நடத்தி வென்றெடுத்த 'இராஜேந்திர சோழனாலும்' உருவானது. சிற்பக்கலை, ஆன்மீகம், ஓவியம், நாட்டியம் இவைகளை வளர்த்தது போல என் பாட்டன் 'ராஜராஜன்', தமிழ் குலத்தின் பெருமையை உலகிற்கு தெரிவிக்கும் விதமாக குடவோலை (தேர்தல்), மெய்கீர்த்தி(டைரி) முறைகளை ஏற்படுத்திய மனித நேயம் மிக்கவன்.

தமிழரின் வாழ்விற்கு இழுக்கு நேரிட்ட போதெல்லாம், தன் வாளின் துணையால் பகை வென்று வீரத்தை நிலை நாட்டியவன். தனது அரசில் பெண்களை அதிகாரிச்சிகளாக நியமித்து பெண்ணுரிமை காத்தவன். சிவ பற்று காரணமாக மாபெரும் தட்சிணமேருவை எழுப்பி ஆன்மீகம் வளர்த்தவன். புலி எவ்வழியோ, அவ்வழியே புலியேறென இராஜேந்திர சோழனாலும் ஆன்மீகம், வீரம், கொடை ஆகியவற்றை சோழர்கள் வளர்த்தனர். இராஜராஜன் தமக்கையோ பெரிய குந்தவை பிராட்டியார். 

நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதி வேண்டி நாடெங்கும் தன் சொந்த செலவில் பல ஆதூரச்சாலைகளை நிறுவி மருத்துவம் வளர்த்தவர். பல அரிய மூலிகைகளை வளர்க்கவென்றே அரசுப் பணியாளர்களை நியமனம் செய்தவர். மக்களின் கல்வியறிவை வளர்க்க, பல கடிகைகளை தேசத்தில் அமைத்தவர். இன்றிருக்கும் தஞ்சை அரசு மருத்துமனையின் பெயர் குந்தவை அரசு மருத்துவமனை என்றேயிருப்பதற்கு அவர்களின் கடமையுணர்வும், அர்ப்பணிப்புமே காரணம்..!
 
இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா..? தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டோ, சரித்திரம் படித்தோ தெரிந்து கொள்ளுங்கள். போகிற போக்கில் புழுதியை வாரி இறைக்காதீர்கள். மனிதர்கள் மீது இவ்வளவு அக்கறை காட்டும் தாங்கள், நோய்வாய்ப் பட்டவர்களை எப்படி குணப்படுத்த வேண்டும் என உங்கள் மதமார்க்கம் கூறுவதை மறந்து விட்டீர்களோ..?

கோவில் எதற்கு, அதற்கெதற்கு இத்தனை செலவு எனக் கேட்ட நீங்கள், "தன் வாழ்வில் ஏழு மனைவிகளைக் கட்டி, நான்காம் மனைவியான மும்தாஜ்பேகத்தை மணமுடிக்க அவளின் முதல் கணவனைக் கொன்று, மும்தாஜை பிள்ளை பெற்றுத் தள்ளும் இயந்திரமாக ஆக்கி, பத்து பிள்ளைகளை பெற்றெடுத்து, பதினோராவது பிரசவத்தில் மரித்துப் போன மும்தாஜூக்கு ஓர் இந்து ஆலயத்தை இடித்து அதன் மேல் கல்லறை கட்டி, அதை காதலின் சின்னம் 'தாஜ்மஹால்' என்று கூறி இன்றளவும் அதற்கு, அந்த கல்லறைக்கு ஆண்டுதோறும் பலகோடிகள் செலவு செய்யும் பைத்தியக்காரத்தனத்தை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை..?

சரி... காதலுக்காக வாழ்ந்த காவிய நாயகி அவள் என்றால், அவள் இறப்பிற்குப் பின் அவளது தங்கையை மணந்த ஷாஜஹானைப் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்.? அவளுக்குப் பின்னும் மூன்று மனைவிகளை மணந்தது தான் காதலின் புனிதமோ..? அல்லது தனது முதல் மனைவிக்குப் பிறந்த தனது மகளுடனேயே உறவு கொண்ட, அந்த உறவு முறைக்கும், அதற்கு இன்றளவும் நீங்கள் பூசிமெழுகும் 'மார்க்க சிந்தனை' வழிகளையும் பற்றி என்றாவது நீங்கள் குறை கூறியது உண்டா..!? 

தப்பித்தவறி நீங்கள் கூறினால், உங்கள் மதத்தவர் உங்களை முற்போக்குவாதி என முச்சந்தியில் நிறுத்தி கல்லெறிவர் என்பதாவது தெரியுமா.?
பெண்ணியம் பற்றி எல்லாம் நீங்கள் எங்களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை... அதை எங்கள் மாமன்னன் எங்களுக்கு கற்றுக் கொடுத்துவிட்டுத் தான் போயிருக்கிறான். நடுவில் வந்த சில மதமாற்றிகளும், எச்சைச் சோற்றுக்கு வாலாட்டும் பிச்சைகளெனத் திரியும் இனப் போராளிகளும் எங்கள் கலாச்சாரப், பண்பாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதால், ஒட்டு மொத்த தமிழினமும் அவ்வாறோ என நீங்கள் நினைத்தால்... அது உங்கள் பேதமைத் தனம்..?!எதையும் எடுத்தோம்.. கவிழ்த்தோம் எனப் போகிற போக்கில் பேசாதீர்கள்..!

இந்து மதத்தைப் பற்றி பேசுவதற்கெல்லாம் ஒரு அருகதை வேண்டும்.. அது உங்களைப் போன்ற நாலாந்தர நடிகைகளுக்கோ,   மதமாற்றிகளுக்கோ கிடையாது.. இனி, ஏனென்றால், சிவத்தைப் பழித்தவர்கள் எவராயினும், அவர்கள்  சவமாகும் போது அடையும் துன்பங்கள் அளவிட முடியாததாய் இருக்கும்.
அத்தகைய துன்பங்கள் உங்களுக்கு வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன்.

மாமன்னன் இராஜராஜனின் தமிழ் வாரிசாக... அழகர்.இரா.

click me!