
முதலமைச்சரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் கூட்டம் நேரமாக ஆக அதிகரித்து கொண்டே வருகிறது. முக்கிய முதலமைச்சர்கள் வந்து சென்ற பிறகு திரை உலகத்தை சேர்ந்த ஏராளமானோர் அடுத்தடுத்து அஞ்சலி செலுத்துவதற்கு ஒரே நேரத்தில் வந்தனர். இதனால் அங்கு சற்று நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த அமைச்சர்கள் எல்லோரையும் பிடித்து தள்ளி அப்புற படுத்தினர்.அப்போது ஏற்பட்ட நெரிசலில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, ரேகா,சுகன்யா நடிகர்கள் சசிக்குமார், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் சிக்கி தவித்தனர்.
அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் மாடி கொண்டனர்.இந்நிலையில் அங்கு வந்த நடிகர் சிம்புவையும் அங்கிருந்தோர் அப்புறப்படுத்த முயன்றனர்.
இதனால் கோபமடைந்த சிம்பு அவர்களை பார்த்து எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன் என்று எகிறினார்.
இதனால் அங்கிருந்த அரசியல்வாதிகள் அமைதியாயினர்.தொடர்ந்து அவர் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.