ஜெய் நடிக்கும் ஒர்க்கர் – பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

Published : Aug 28, 2025, 07:59 PM IST
Jai New Movie Worker

சுருக்கம்

Jai New Movie Worker Shoot Starts With Poojai : ஜெய் நடிப்பில் உருவாகும் ஒர்க்கர் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜெய் தற்போது ஒர்க்கர் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஜெய் உடன் இணைந்து யோகி பாபு, ரீஷ்மா நனையா ஆகியோர் பலரும் நடிக்கின்றனர். வினய் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க உண்மைக் கதையை மையப்படுத்திய படமாக இந்தப் படம் உருவாகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

ஒர்க்கர் படத்தின் பூஜை இன்று படக்குழுவினர் கலந்துக் கொள்ள சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெய் மற்றும் நயன்தாரா ஆகியோரது நடிப்பில் வெளியான அன்னபூரணி படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பேபி அண்ட் பேபி படம் வெளியானது. இந்தப் படம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இந்தப் படத்தில் ஜெய் உடன் இணைந்து யோகி பாபுவும் நடித்திருந்தார். அதன் பிறகு உருவாகி வந்த கருப்பர் நகரம் தாமதமான நிலையில் ஜெய் 34 மற்றும் ஒர்க்கர் ஆகிய படங்களின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: வெடித்த உண்மை! மாமனாரின் தலையில் போட அண்டாவை தூக்கிய சரவணன்!
மாமனார் - மருமகன் மோதல்; குடும்ப சண்டையால் பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2; ஹைலைட்ஸ்!