அது அவசரத்தில் எடுத்த முடிவு... ஒரே ஹோட்டலில் தனுஷ்- ஐஸ்வர்யா... சளைக்காத ரஜினி..!

By Thiraviaraj RMFirst Published Jan 23, 2022, 2:44 PM IST
Highlights

இருவரும் சமரசமாகி விரைவில் ஒன்றாக வாழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரம் என்னவாகுகோ, ஏதாகுமோ என சில நாட்களாக ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். தனுஷும், ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். 18 வருடங்கள் தாம்பத்யம் நடத்திய அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள். ஓரளவுக்கு வளர்ந்தும் விட்டார்கள்.

யார் கண் பட்டதோ திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி தனுஷும், ஐஸ்வர்யாவும் சமூக வலைதளங்களில் அறிவித்து அதிர வைத்தார்கள். இது அவசரப்பட்ட முடிவு என பலரும் கருத்து தெரிவித்தார்கள். திரையுலகை சேர்ந்த பலரும் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தார்கள். 

பிரிவு அறிவிப்பை வெளியிட்ட பிறகும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் தனுஷின் பெயரை ஐஸ்வர்யா இதுவரை நீக்கவில்லை. வழக்கமாக யாராவது விவாகரத்து குறித்து அறிவித்தால் உடனே சமூக வலைதள பக்கங்களில் இருந்து கணவர் பெயரை நீக்கிவிடுவார்கள். இதுவே இருவரும் சமாதானமாகி வருவதற்கு அறிகுறியாக தெரிகிறது. 

ஐஸ்வர்யாவும், தனுஷும் முறைப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. தனுஷையும், ஐஸ்வர்யாவையும் மீண்டும் சேர்த்து வைக்கவே இருவரது குடும்பத்தாரும், நண்பர்களும் முயற்சி செய்து வருகிறார்கள். தனுஷும் முறைப்படி விவாகரத்து கேட்டு நீதிமன்றம் செல்ல மாட்டார்கள் என பேச்சு கிளம்பியிருக்கிறது.

இந்த நிலைமையில்தான், தனுஷும், ஐஸ்வர்யாவும் ஹைதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தனுஷ் ஹைதராபாத்தில் தங்கி வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார்.

 ஐஸ்வர்யாவும் தனது படவேலைகளுக்காக ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் ஸ்டுடியோஸில் இருக்கும் சித்தாரா ஹோட்டலில் அவர்கள் தங்கியிருக்கிறார்கள். ராமோஜி ராவ் ஸ்டுடியோஸில் ஷூட்டிங்கிற்கு வரும் பிரபலங்கள் சித்தாரா ஹோட்டலில் தான் பெரும்பாலும் தங்குவார்கள்.

ஐஸ்வர்யாவும், தனுஷும் ஹைதராபாத்தில் சந்தித்து பேசினார்களா என்பது தெரியவில்லை. ஆனால் தாங்கள் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பது மட்டும் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நன்கு தெரியுமாம். இதனால் இருவரும் சமரசமாகி விரைவில் ஒன்றாக வாழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!